India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் உள்ள மத்திய அரசின் கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதி விடுப்பில் உள்ளதால் வங்கியில் கடன் வாங்கிய தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் கேரளாவில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயம் சென்று நிவாரணம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களையே அழிப்பது போல் உள்ளது எனவும் வேதனை தெரிவித்துள்ளது.
அழகர்கோயில் அழகர் மலை அடிவாரத்தில் இருந்து மலைப் பகுதியில் 3 கி.மீ., தொலைவில் முருகனின் அறுபடை வீடுகளில் 6-ம் படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோயில் அமைந்துள்ளது. பழமுதிர்ச்சோலைக்குச் செல்லும் 3 கிமீ தூர சாலை மிகவும் மோசமடைந்து கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் தற்போது 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நடப்பு ஒரு வாரத்தில் மட்டும் 107 பேருக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வரும் செப்.28 அன்று அமெரிக்கன் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 8807723434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த கூறிய
வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதிகள் சுப்ரமணியன்,சுந்தர்மோகன் அமர்வு, “நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது? என கேள்வி எழுப்பி சுகாதாரத்துறை முதன்மை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்.30 க்கு ஒத்திவைத்தனர்.
தமிழகத்தில் தொடர்ந்து என்கவுண்டர் செய்யப்படும் சம்பவத்திற்கு மதுரை மக்கள் கண்காணிப்பாக நிறுவனர் ஹென்றி திபேன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 16 போலி என்கவுண்ட்டர்கள் நடத்தியுள்ளதாகவும், சமூகநீதி பேசும் திமுக அரசு என்கவுண்ட்டரை நம்புகிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606) திருச்செந்தூரிலிருந்து இன்று இரவு 08.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோழவந்தானில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்த புதிய ரயில்வே மேம்பாலத்தில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சேதமடைந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். பயன்பாட்டிற்கு வந்த ஓராண்டிற்குள் மேம்பால சாலை சேதமடைந்தது குறித்து நேற்று Way 2 செய்தியாக வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக இன்று பேரூராட்சி நிர்வாகம் தற்காலிகமாக சேதமடைந்த சாலையை சீரமைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் கொளுத்தியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரை நகர்ப் பகுதியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலையும் பதிவாங்கியுள்ளது. தொடர்ந்து மதுரை மாநகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும்
பணிபுரியம் பெண்களை பாதுகாக்க உள்ளக குழு (IC) அமைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். மேலும் உள்ளக குழு அமைக்காத அரசு அலுவலகம், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகம், தனியார் நிறுவனங்கள் மீது ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.