India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இயற்கை மூலிகை பூச்சிவிரட்டியை விவசாயிகள் சொந்தமாக தயாரிக்கும் வகையில் வேளாண் துறை சார்பில் ஆடாதொடை, நொச்சி கன்றுகள் வழங்கப்படுவதாக வேளாண் துணை இயக்குநர் மேரி ஐரீன் ஆக்னட்டா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்திற்கு ஒன்றரை லட்சம் ஆடாதொடை, நொச்சி கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் இதனை பெற அந்தந்த வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.
மதுரை அக்ஷயா டிரஸ்ட் ஆதரவற்றோர் காப்பகத்தில் இயற்கை மரணம் அடைவோரை உடற் கூராய்வு மேற்கொள்ளாமல் அடக்கம் செய்ய அனுமதி வழங்க கோரிய மனு மீதான விசாரணையில், மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளார். ஆதரவற்றோர் காப்பகத்தில் மரணமடைவோர் இயற்கை மரணம்தானா?அல்லது வேறு ஏதேனும் மரணமா? எனவும் கேள்வி எழுப்பியது.
இந்திய அஞ்சல் துறையின் சார்பாக மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் வ.உ.சி மகாலில் நாளை ( 3-10-2024) காலை 10 மணி முதல் மாலை 04.00 மணி வரை ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பிழை திருத்தம்,
முகவரி மாற்றுதல், போன் நம்பர் மாற்றுதல்
புகைப்படம் எடுத்தல், கைரேகை மறு பதிவு போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இலவச தொழிற்பயிற்சிகளை வழங்கிட வரும் 09.10.2024ம் தேதி அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். முகாமில் பங்கேற்பு விருப்பம் உள்ளவர்கள் QR கோடு மூலம் ஸ்கேன் செய்தோ, 8778945248 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உதயநிதியை துணை முதலமைச்சராக்கிவிட்டனர் என்ற குழப்பத்தில் நிதானம் இல்லாமல் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
மதுரை தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய (காதி கிராஃப்ட்)மையத்தில் இன்று தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் கலந்துகொண்டு விற்பனையை துவக்கி வைத்தார். கதர், பாலிவஸ்தரா, பட்டு ரகங்களுக்கு 30%-ம் உல்லன் ரகங்களுக்கு 20%-ம் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது. மேலும் இந்தாண்டு ரூ.1.37 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 6 சதவீத சொத்துவரி உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடப்பாண்டிற்கு தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்திக்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை மாநகராட்சியில் நடப்பு அக்டோபர் மாதம் முதல் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 சதவீதம் சொத்து வரி உயர்வு என்பது அனைத்து மாநகராட்சிக்கும் பொதுவான உத்தரவுதான் என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
விவசாயத்திற்கு தண்ணீர் வழங்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் உண்பதற்கு அரிசி கிடைக்காது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் மருதூர் காவிரி ஆற்றில் நடக்கும் குடிநீர் திட்டப்பணிகளால் விவசாயம் பாதியாக குறைந்ததாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
காந்தி ஜெயந்தியையொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் புதன்கிழமை தடை விதிக்கப்படுவதாக மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் அறிவித்தாா்.
எனவே ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்யவோ, இவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யவோ கூடாது. கடைகளையும் திறந்துவைக்கவும் கூடாது. தடையை மீறிச் செயல்படுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கி மூலம் கடன் உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் முன்னாள் ராணுவ வீரர்கள், மரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவியர் தங்கள் விண்ணப்பத்தை அக்.15க்குள் முன்னாள் படைவீரர் நல துணை அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.