India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை நிலையூர் பகுதியில் போலி பட்டா வழங்கிய வழக்கில் மதுரை ஆட்சியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இதில் தொடர்புடைய வருவாய் துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலிம் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல் கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து தற்காலிகமாக பொறுப்பு முதல்வராக செல்வராணி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மருத்துவ கல்லூரியின் நிரந்தர முதல்வராக மதுரை அரசு மருத்துவமனையின் ENT மருத்துவராக பணிபுரியும் அருள் சுந்தரேஷ் குமாரை நியமித்து தமிழக மருத்துவ துறை உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன் மாணிக்கவேல் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 4 வாரம் இன்னும் முழுமையடையாததால் தற்போது நிபந்தனையை தளர்த்த முடியாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்.14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் நெய் தயாரிக்கும் உரிமையை ஏன் ரத்து செய்ய கூடாது? என மத்திய உணவு பாதுகாப்பு துறை அனுப்பியுள்ள நோட்டீஸை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணையில், நோட்டீசின் அடிப்படையில் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மதுரை மாநகராட்சியின் துணை மேயரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஜூலை மாதம் வசந்தா என்ற பெண்ணை பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சாதி ரீதியாக திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்து கொள்வதற்கு மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். 1330 குறட்பாக்களையும் முழுமையாக
ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு 15,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் வரும் 25ம் தேதிக்குள் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள வேட்டையன் படத்தில் வரும் ‘புகழ்பெற்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ மற்றும் என்கவுன்டர் என்பது தண்டனை மட்டுமல்ல, குற்றங்களைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கையும் கூட என்ற வசனத்தை முற்றிலும் நீக்கவும் அதுவரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட் மதுரை பழனிவேல் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று(அக்.03) விசாரணைக்கு வர உள்ளது.
மதுரையில் தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் நேற்று(அக்.02) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிரகாஷின் தற்கொலைக்கு காரணமான ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.
தஞ்சையைச் சேர்ந்த காளீஸ்வரன் (28) மதுரை கே.கே நகர் பகுதியில் இயங்கும் மதனமீரானுக்கு சொந்தமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையத்தில் வெளிநாட்டு வேலைக்காக நாடி உள்ளார். வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக காளீஸ்வரனிடம் ரூ.12 லட்சம் பெற்ற மதனமீரான் வேலை வாங்கி கொடுக்காமல் 3 லட்சத்தை மட்டும் திருப்பி செலுத்திவிட்டு ரூ.9 லட்சத்தை மோசடி செய்துள்ளார். காளீஸ்வரன் புகாரில் மதனமீரான் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் ரயில்வே தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் ரயில் எண்.06674/06409 திருச்செந்தூர் – திருநெல்வேலி – திருச்செந்தூர் தினசரி பயணிகள் ரயில் வரும் 04.10.2024 முதல் 08.10.2024 வரை 5 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.