India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய நிதி துறையின் கீழ் செயல்படும் கடன் வசூல் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என மதுரை ஐகோர்ட் சாடியுள்ளது. தமிழகத்தில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் (DRT)காலியாக இருக்கும் விசாரணை அதிகாரி பணியிடங்கள் எத்தனை? ஏன் காலி பணியிடங்களை நிரப்பவில்லை? காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய நிதித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆவுடைநாயகி சமேத சத்தியகிரீஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவில் மூன்றாம் நாளான இன்று (அக்.5) கோவர்த்தனாம்பிகை ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து சிறப்பு ஆராதனையும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் நாளை (06/10/2024) பகல் 12.00 மணி அளவில் குடை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் மூலவருக்கு புஷ்ஷுக்கு அலங்காரமும், உற்சவர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள், உட்பிரகாரம் ஆண்டாள் சன்னதி முன்பு எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம் நடைபெறும். அதனை தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என கோயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நவராத்திரி விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06178) சென்னையிலிருந்து அக். 9 இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து அக்.10 இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.
மதுரை மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடியில் மீன் மார்க்கெட் கட்டப்படுகிறது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரிமேட்டில் பழைய மீன் மார்க்கெட் இருந்த இடத்தில் அறிவியல் மையம் அமைவதால் மத்திய, மாநில மீன் வளத்துறை சார்பில் வழங்கப்படும் நிதி மூலம் ரூ.1 கோடியில் பிரம்மாண்டமான புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06186) அக்டோபர் 8 அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.50 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
மழைக்காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு ஆகிய விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ள TN- Alert என்ற கைப்பேசி செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். மேலும் பேரிடர் தொடர்பான புகாருக்கு 1077 என்ற இலவச அழைப்பு எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் முதல் போக சாகுபடி நெல் பயிா்களில் புகையான், தத்துப் பூச்சி, இலைச்சுருட்டுப் புழு தாக்குதல்கள் பரவலாக இருப்பதால், உரிய நோய் மேலாண்மையைக் கடைப்பிடிக்குமாறு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்த முள்ளுள்ள கொப்புகளைக் கொண்டு இலை மடிப்புகளைத் திறக்க வேண்டும் எனவும் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை திருவேடகம் காலனியைச் சேர்ந்தவர் அய்யனார் அவரது மனைவி உமா அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவருடன் திடீரென மாயமாகினர். ஆத்திரமடைந்த அய்யனார் நேற்று முன்தினம்(அக்.3) இரவு திடீரென விவேக் வீட்டுக்கு முத்துச்சாமி (50), அவரது மனைவி பொன்மணி (42), பேரன் மாதேஷ் பாண்டியன் (6) ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில் சிறுவன் மாதேஷ் பாண்டி நேற்று(அக்.4) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ரேணுகா நேற்று (அக்.4) பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய கார்த்திகா கடந்த மாதம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிதாக ரேணுகா நியமிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் தனது பணியை துவக்கியுள்ளார். முன்னதாக இவர் மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பணியாற்றியுள்ளது குறுப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.