India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் எண். 06074/06073 திருநெல்வேலி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – திருநெல்வேலி ஏசி எக்ஸ்பிரஸ் ரயில் அக்டோபர் 27, 28 ஆம் நாட்களில் இயக்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
சோழவந்தான் அருகே மேல மட்டையான் கிராமத்தை சேர்ந்த அழகர்(35) தனது மகன் ஜெகதீஸ்வரன்(4) அருகில் உள்ள கண்மாயில் குளிக்க சென்ற போது கண்மாய் முழுவதும் நீர் பெருகியுள்ளன நிலையில் நீரில் மூழ்கி தந்தையும் மகனும் உயிர் இழந்தனர்.
இன்று (அக்.26) காலை கண்மாய்க்கு சென்றவர்கள் 2 உடல்கள் நீரில் மிதப்பதை கண்டு காடுபட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மதுரையில் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெய்த மழையின் காரணமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. இந்நிலையில், கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து மதுரை- கிழக்கு, வடக்கு வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியின் மனைவியும் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவருமான தேவி, கிராம ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என கடந்த 23 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இந்த உத்தரவால் சங்கராபுரம் ஊராட்சி தலைவராக தேவி பதவியில் தொடர தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அழகர்கோவில் மலை மேல் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா நவ.2 முதல் நவ. 8 வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காப்பு கட்டுதல், யாகசால பூஜைகளுடன் விழா தொடங்கும். அன்று அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதே போல் 7 நாட்களும் விழா நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
வரலாறு காணாத அளவிற்கு மதுரையை புரட்டிப்போட்ட கனமழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் மதுரையின் மழை பாதிப்பு குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் காணொளி காட்சி மூலம் அவசர ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது வெள்ள பாதிப்புகளை சரி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மதுரை மாநகரில் இன்று மாலை பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பி.பி.குளம், முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா நேரில் ஆய்வு கொண்டார்.உடன் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார்,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட பலர் உள்ளனர்.
மதுரையில் இன்று வரலாறு காணாத மழை பெய்ததால் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை நீடித்தால் இரவு முழுவதும் அவர்களை அங்கு தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயில் எண்.06088 ஷாலிமார் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் ஷாலிமாரில் இருந்து அக்டோபர் 26 அன்று காலை 17.10 மணிக்குப் புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 15 நிமிடங்களில் 45 மில்லி மீட்டர் மழை பொழிவு மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று மதியம் 3 மணி முதல் 3.15 மணி வரை செய்த மழைத்தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் 15 நிமிடங்களில் சுமார் 45 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.