India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் செய்தியாளர்களை சந்திப்பின் போது விஜயின் தவெக மாநாடு குறித்து பதிலளித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் : விஜயின் அரசியல் பயணத்திற்கான வெற்றியை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரு அண்ணனாக தம்பி விஜயின் இந்த புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். 2026 தேர்தல் பணிக்காக நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்; நாங்கள் தனித்து போட்டியிடும் நோக்கத்தில் உள்ளோம்; எனது இலக்கே எனது பயணம் எனக்கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தற்போது விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் திட்டங்களை சற்றுமுன் கேத்ரின் பாண்டியன் வெளியிட்டார். அதில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறைப்படுத்தப்படும். உயர்நீதி மன்றக்கிளை அமைக்கப்பட்டது போல மதுரையில் தலைமைச் செயலக கிளை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய மாணவன் அபிஷேக்கை கைது செய்துள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு அளித்த புகாரில் கேணிக்கரை போலீசார், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக விஜயின் மாநாடு குறித்து மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். ஒரே கொள்கையாக இருந்தால் கூட்டணி அமைத்து நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலம் தான் இதனை நிர்ணயம் செய்யும். இந்த இடத்தில் தம்பி விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.கருத்தரிக்கும் போதே அது பெண் குழந்தை ஆண் குழந்தை என ஏன் நீங்கள் சண்டை போடுகிறீர்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
மதுரை மாவட்டத்தில், தொழிற்கல்வியில் சேர்ந்து முதலாண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகள்கள், பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ, 0452- 230 8216 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
மதுரையில் மழை வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வாக செல்லூர் கண்மாயிலிருந்து கூடுதலாக தற்காலிக கால்வாய் அமைத்து அதனை வைகையாற்றில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் முயற்சியாக ஏற்கனவே தூர்ந்து போய் உள்ள பழமையான நீர் வரத்து கால்வாயை நேற்று முதல் சீரமைப்பு செய்து அதனை ஒழுங்குபடுத்தி தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
மதுரை மாநகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தல்லாகுளம் தெற்கு வாசல், அவனியாபுரம், திலகர் திடல் உட்பட ஐந்து காவல் சரக்குகளில் இன்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தொடர்பான விவரங்களை மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது.பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
வெளியூரில் இருக்கும் மக்கள் பண்டிகை கொண்டாட்டிற்கு போக்குவரத்தினை மேற்கொள்ளும் வகையில், தீபாவளியை முன்னிட்டு மதுரையிலிருந்து தாம்பரத்திற்கு, தாம்பரத்திலிருந்து மதுரைக்கு அக்.29,30 மற்றும் நவம்பர் 2ஆம் தேதி விரைவு ரயில் இயக்க திட்டமிட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கீழ்காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மதுரை ஆட்சியர் சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார். மாநில கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா (Toll Free)-1070 மாவட்ட கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்-1077 மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டுஅறை 0452-2546161 வாட்சப் எண் 9655066404 (மதுரை வெள்ளப்பாதிப்பு பகுதி மக்களுக்கு பகிரவும்)
மழைக்காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN- Alert என்னும் செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியினை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான தகவல்களும் அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் சங்கீதா தகவல் அளித்துள்ளார். (பகிரவும் – SHARE IT)
Sorry, no posts matched your criteria.