India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று(அக்.29) உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை தினமும் நடத்தி 2025 ஜூன் மாதத்திற்குள் முடிக்க “மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு” உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை மதுரை எம்.பி., எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு 4 வாரங்களில் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் செயல்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான நபர்கள் நூலகத்திற்கு வந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.31 (வியாழக்கிழமை) அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி அருகில் டைடல் பார் அமைய உள்ளது. இதற்கான இடத்தில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் பி.ஆர்.பி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.எல்.ஏ கோ. தளபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். டைட்டில் பார்க் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கி 2026 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு அக் 29 அன்று விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார். மேலும் வாக்கு சாவடிகளில் நவ,16&17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மதுரை அலங்காநல்லூர் கரட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜோதிகா உடப்பன் என்பவரிடம் கடந்த ஒரு வருடமாக தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் மீண்டும் கணவரோடு வாழ்ந்து வந்த நிலையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று உடப்பனுடன், ஜோதிகா ஆகியோர் இணைந்து சரவணனை கொலை செய்தனர்.
பருவமழை காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்கவும், மின் உபகரணம் பழுதடைவது குறித்த தகவல்களை வாரியத்தில் தெரிவிக்க அலைபேசி எண்களை மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி தெரிவித்துள்ளார். அதன்படி உசிலம்பட்டி கோட்டம் – 9445852888, திருமங்கலம் கோட்டம் – 9445852828, சமயநல்லூர் கோட்டம் – 9445852900, மதுரை கிழக்கு கோட்டம் – 9445852848 எண்களில் பொதுமக்கள் தங்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு 29 துணை மாவட்ட ஆட்சியர்களை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி விருதுநகர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக இருந்த கார்த்திகாயினி மதுரையின் வருவாய் கோட்டாட்சியராக பணி மாற்றம் செய்யப்படுகிறார். துணை ஆட்சியராக இருந்த வெ.ஜெயந்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு பணியில் 3000 போலீசார், 3 சிறப்பு பட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மதுரை வழியாக பசும்பொன்னுக்கு வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செல்லக்கூடிய வழித்தடங்கள், போலீஸ் அனுமதி சீட்டு குறித்து செக்போஸ்டில் போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள் என மதுரை மாநகர் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார். விஜய்யின் படங்கள் போலவே அவருடைய கட்சி மாநாடு தொடக்கம் நன்றாக உள்ளது. விஜய்யின் தொண்டர்கள் மகிழ்ச்சியில் கடலில் ஆழ்ந்துள்ளனர். திமுகவில் உள்ள 60 சதவீத இளைஞர்கள் விஜயின் ரசிகர்களாக இருப்பதால் திமுகவுக்கு விஜயை வாழ்த்த மனமில்லை. திமுகவின் இளைஞர் வட்டாரம் விஜய் கட்சிக்கு வந்ததால் திமுகவினர் குத்துதே குடையுதே என பேசி வருகிறார்கள் என்றார்.
Sorry, no posts matched your criteria.