India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும்
➤ வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்
➤ தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்.
SHARE IT!
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மதுரை மாநகர் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காலை 06.00 மணி முதல் 07.00 மணி மற்றும் இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், விலங்குகளை துன்புறுத்தும் வகையிலோ அல்லது அவைகள் பயப்படும் வகையிலோ பட்டாசுகளை வெடிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.
மதுரையில் மழைவெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது மதுரையில் வெள்ள பாதிப்பு நிலை குறித்து ஆட்சியரிடம் கேட்டறிந்த அவர் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மூர்த்தி பழனிவேல் தியாகராஜன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மருது சகோதரர் சிலைக்கு மாலை அணிவிக்க இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.ஊர்வலமாக வந்த 16 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொண்டர்களுக்கும் போலீஸ்காரரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் உட்பட கட்சி தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பு உள்ளதன் காரணமாக மதுரை கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய வாகனங்களுக்கு இரண்டாவது நாளாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பீ.பீ.குளம், இந்திரா நகர் பகுதி கால்வாயில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று(அக்.29) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மோனிகா ரானா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை வந்த வி.கே சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். விஜயின் மாநாடு குறித்து பேசிய அவர், யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. கட்சி ஒன்றிணைப்பது குறித்த கேள்விக்கு: நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். அது எங்களின் வேலை. மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான். இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது எனக் கூறினார்.
நாளை தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் இருக்கும் தேவர் சிலைக்கு தலைவர்கள், சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்துவார்கள். இதனால் நாளை காலை 6:00 மணி முதல் இரவு 10:30 மணிவரை கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் வர தடை விதித்து மாநகர காவல் துறையினர் உத்தரவு. மீறிவரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. அரசாணை வெளியிட்டு ஒரு வருடமான நிலையில் மனு தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்காக வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மதுரையில் நவ. 6, 8, 9,13,15,16 20,22,23,27 ஆகிய நாட்கள் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவில் நடைபெறுகிறது. *பயனுள்ளவர்களுக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.