India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.அதன்படி வரும் 05.11.2024 மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது.
தீபாவளி பண்டிகையால் மதுரை மாநகரில் கடந்த மூன்று நாட்களில் 2173 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக சுழற்சி முறையில் சுமார் 3,000 தூய்மை பணியாளர்கள் மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் களப்பணியாற்றி குப்பைகளை தொடர்ந்து அகற்றி வந்தனர். இதுவரை 2173 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று 438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.இந்த ஆண்டு 29 கோடியே 10 லட்சம் அளவுக்கு மது விற்பனை குறைந்துள்ளது.மதுரையை முந்தி சென்னை மண்டலம் மது விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.மதுரை மண்டலம் 30ந் தேதி 40.88 கோடி மற்றும் 31ந் தேதி 47.73 கோடி மது விற்பனையுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது
மதுரை மாநகர் பகுதியான ஊத்தங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இந்த துணைமின் நிலையத்திற்குட்பட்ட எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னக ரயில்வே மதுரை கூட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரயில்வே வழித்தட பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வண்டி எண்-20606 திருச்செந்தூரிலிருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி மட்டும் தாமதமாக இரவு 10.35 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும்.
“தூங்கா நகரம்” என அழைக்கப்படும் மதுரை இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பருந்து பார்வை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த பிரமாண்ட புகைப்படத்தில் மதுரை மாநகரம் முழுவதுமாக காட்சியளிக்கிறது. இன்று மாலை எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மதுரை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் குறித்த தகவல்களை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் சார்ந்த புகார்களுக்கு அவர்களது அலைபேசி எண்களை வழங்கியுள்ள மாநகர காவல்துறை அவர்களை அழைத்து உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெடி வெடித்து காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைடில் பலர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஆண்கள் 5 பேர், சிறுவர்கள் 2 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்ற சென்றனர். அதிக காயம் காரணமாக ஆண்களில் 16 பேரும், பெண்களில் 2 பேரும், சிறுவர்கள் 4 பேர் என மொத்தம் 22 பேர் மருத்துவமனையில் இன்று தொடர் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் நாள்தோறும் 900 முதல் 950 டன் குப்பைகள் மாநகராட்சி பகுதிகளில் அள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தீபாவளியை முன்னிட்டு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 30.10.2024 அன்று 994 டன் குப்பைகளும், 31.10.2024 அன்று 326 டன் குப்பைகளும், 01.11.2024 (6.00 மணி வரை) அன்று 370 டன் குப்பைகளும் என மூன்று நாட்களில் மட்டும் 1690 டன் குப்பைகள் 4051 மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விரதம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நாளை (நவ.2) காலை தொடங்குகிறது. இந்நிலையில் இன்று (நவ.1) விரதம் மேற்கொள்ளும் பொதுமக்கள் கோவில் மண்டபங்களில் போர்வை விரித்தும், சாக்பீஸ்களால் தங்களது பெயர், ஊரின் பெயர் எழுதி இடம் பிடித்து வருகின்றனர். இதனால் கோவிலில் இடம் பிடிப்பதில் போட்டா போட்டி நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.