India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட கால்நடை மண்டல துணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை மாவட்டத்தில் உள்ள 3,27,900 ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் ஆடுகளுக்கு நோய் தாக்குதல், சில நேரங்களில் இறப்பு ஏற்படும். எனவே மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆகையால், தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் ‘டிஜிட்டல் கிராப் சர்வே’ திட்டத்தின் கீழ் 52.4 சதவீத பயிர்கள் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களின் சாகுபடி விவரம், பரப்பளவு குறித்த விவரங்கள் அடங்கல் செயலி மூலம் நவ.6ல் இருந்து சர்வே செய்யப்பட்டு பதிவேற்றப்படுகிறது. நவ.21 க்குள் பணிகளை முடிக்க வேளாண் துறை கமிஷனர் அபூர்வா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக மதுரை திருநகர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 6 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள கஸ்தூரியை கைது செய்ய திருப்பரங்குன்றம் சரக காவல் துணை ஆணையர் குருசாமி தலைமையிலான 2 தனிப்படைகள் சென்னை விரைந்துள்ளன.
சென்னையில் தெலுங்கு பேசும் மக்கள் பற்றி நடிகை கஸ்தூரி இழிவாக பேசியது பெரும் பேசுபொருளாக மாறியது. இதற்கு பலத்த கண்டனம் எழுந்ததுடன் வழக்குகளும் பதிவானது. இந்த நிலையில், கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் கஸ்தூரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட் இன்று (நவ.14) உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாக்டர்கள் மீது தொடர் தாக்குதலுக்கு அரசு கூறும் பதில் என்ன என அதிமுக மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இதன் மூலம் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது. வெட்ட வெளிச்சமாகி உள்ளது. மக்கள் உயிரை காக்கும் மருத்துவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. திமுக அரசு மருத்துவர்களுக்கு என்ன பாதுகாப்பு.
தேனி மாவட்டம் வாலிப்பாறை முதல் ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை வரை 177 இடங்களில் 197 குழாய்கள் மூலம் வைகையாற்றுக்குள் கழிவுநீர் நேரடியாக கலப்பது மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தேனியில் 18 இடங்கள், திண்டுக்கல் 2 இடங்கள், மதுரையில் 64 இடங்கள், சிவகங்கையில் 29 இடங்கள், இராமநாதபுரத்தில் 64 இடங்கள் என மொத்தம் 177 இடங்களில் வைகையாற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது.
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககம் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இளநிலை, முதுநிலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் நிலைகளில் மொத்தம் 92 படிப்புகள் வழங்கப்படுகின்றன. https://mkuniversityadmission.samarth.edu.in/july24/ எனும் இணையப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் நாளைக்குள்(நவ.15) விண்ணப்பிக்க வேண்டும்.
தெலுங்கு பேசும் மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி தொடர்ந்த முன்ஜாமின் மனு மீது இன்று (நவ. 14) காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்குகிறது. மதுரை அருகே திருநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கில் கஸ்தூரி முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் மோசடி குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cvbercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம் என மதுரை எஸ்.பி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
பீ.பீ.குளம் அருகில் முல்லைநகர் பகுதியில் சுமார் 592 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இந்த பகுதியில் உள்ள மக்கள் காலி செய்யப்படவேண்டும் என்றும், மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்றும் ஆணையிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை ஒத்தி வைத்திட தேவையான சட்ட முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.