Madurai

News February 15, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (14.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 14, 2026

மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News February 14, 2026

மதுரை: கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்.!

image

சக்குடியை சேர்ந்த மலைச்சாமி(56), மனைவி காளியம்மாளுடன்(51) டூவீலரில் திருவாதவூர் ரோட்டில் நேற்று வந்து கொண்டிருந்தார். பதினெட்டாங்குடி அருகே பெட்ரோல் தீர்ந்து போக, டூவீலரை உருட்டியபடி அவர்கள் நடந்தனர். அங்கு மேய்ந்து கொண்டு இருந்த மாடு ஒன்று காளியம்மாளை முட்டியது. மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு பலியானார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 14, 2026

மதுரை: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை 4 வகைகள் உள்ளது.

AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்

PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்

NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்

NPHH: சில பொருட்கள் மட்டும்

உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 14, 2026

மதுரை: ரவுடி தற்கொலை – அதிர்ச்சியூட்டும் காரணம்..!

image

மதுரை, சமயநல்லூர் அருகே அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ரவுடி பிசிறு என்ற பிரபு(31) நேற்று முன்தினம்(பிப்.12) அவரது வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபு மீது கொலை, கூட்டு பாலியல், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமயநல்லூர் போலீசார் விசாரணையில் இரவு மது அருந்த பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மனைவி பணம் தர மறுத்ததால் தற்கொலை செய்துள்ளார்.

News February 14, 2026

மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மதுரை மக்களே; இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

மதுரை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

image

மதுரை கோச்சடையை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ரம்யா (19) தனியார் கல்லூரி ஒன்றில் 2 ஆம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவி மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

News February 14, 2026

மதுரை மாநகராட்சியில் குடிநீர் நிறுத்தம்!

image

மதுரை மாநகராட்சி முக்கிய இடங்களில், குடிநீர் பைப் லைன்களில் புதிய வால்வுகள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால், வரும் பிப்.17 & பிப்.18. ஆகிய 2 நாட்களுக்கு, வைகை தென்கரை வார்டு எண்: 44 முதல் 70 வரையும், 76, 77, 85, 89 ஆகிய வார்டு பகுதிகளிலும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *SHARE பண்ணுங்க.

News February 13, 2026

மாநகர காவல்துறை இரவு ரோந்து அட்டவணை

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் சந்திரலேகா தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் இலக்கியா வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

மதுரை: பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்

image

உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி செல்வராணி (40). ரவிக்குமார் ராஜஸ்தானில் தோசை கடை வைத்துள்ளார். செல்வராணி தனது இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உசிலம்பட்டி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!