Madurai

News November 15, 2024

மதுரையில் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு

image

மதுரை : தனுஷ் இயக்கத்தில் 4வது படமாக ‘இட்லிக்கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இட்லிக்கடை படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மதுரையில் தொடங்குகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.

News November 15, 2024

தேனியில் நீருபரை தாக்கிய மூவர் கைது

image

தேனி, கண்டமனுார் அருகே ஜி. உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(50), நிருபராக பணிபுரிகிறார். நவ.13 அன்று கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் அரிவாளுடன் மூவர் ஓடிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்து எங்கே ஓடுகிறீர்கள் என கேட்ட பால்பாண்டியின் இடது பக்க தலையில் அரிவாளால், வெட்டினர். பின்னர் பால்பாண்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர். கண்டமனுார் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

News November 15, 2024

மதுரையில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை 

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரையில் ஒலிம்பிக் அகாடமி அமைகிறது. இதற்காக மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில், 6 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிக்கிற உலக அளவிலான ஒலிம்பிக் போட்டியைக் கூட மதுரையில் நடத்தலாமா என்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

News November 15, 2024

பஞ்சாயத்து தலைவரின் வெற்றி செல்லாது – ஐகோர்ட்

image

காரைக்குடி சங்கராபுரம் கிராம ஊராட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலில் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி வெற்றியை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

News November 15, 2024

சாலையோரம் தலை கிடந்த விவகாரம்- காவல்துறை விளக்கம்

image

மதுரை நாராயணபுரம் கண்மாய் அருகே இன்று சாலை ஓரமாக சுமார் 70 வயது மதிக்கத்தக்க இறந்த நபரின் தலை மட்டும் கிடந்தது. இதை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த தும்மக்குண்டுவை சேர்ந்த பேச்சி (70), என்பவரது சடலம் நாராயணபுரம் மயானத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் அதன் தலையை நாய் கவ்விக்கொண்டு சாலையோரம் விட்டு சென்றது தெரிய வந்துள்ளதாக மதுரை மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

News November 14, 2024

மதுரை மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் எண் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதியில் உள்ள காவல் சரகங்களான மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (14.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு இதில் குறிப்பிட்டுள்ள எண்களை அழைக்கலாம்.

News November 14, 2024

மதுரையில் 8 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

image

மதுரை சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (நவ.14) 8வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியரும் பள்ளியை புறக்கணித்து இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

News November 14, 2024

கூட்டணியில் குழப்பம் இல்லை – துரை வைகோ

image

திமுக கூட்டணி தொடர்ந்து செயல்படும். கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார். மதுரையில் வைகோவின் உதவியாளர் ஜெயபிரசாந்த் திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கூட்டணியில் சேதாரம் ஏற்படும் என எதிர்தரப்பினர் நினைக்கின்றனர். 2026-லும் இதே கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்தார்.

News November 14, 2024

மதுரை – சென்னை ரயில் இன்று ரத்து

image

இன்று (நவ.14) மதுரையிலிருந்து மாலை 8.50 மணிக்கு புறப்படும் மதுரை – சென்னை (22624) விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. மேலும், நாளை (நவ.15) சென்னையிலிருந்து இரவு 10.5 மணிக்கு புறப்படும் (22623) சென்னை – மதுரை விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News November 14, 2024

தமிழ் கல்வெட்டுக்கள் மீண்டும் மைசூருக்கு மாற்ற முயற்சி?

image

பல ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்ட தமிழக கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற திரை மறைவு பணிகள் துவங்கிவிட்டதாக மதுரை எம்.பி சு.வெ., குற்றம் சாட்டியுள்ளார். இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சியும் செய்ய வேண்டும் எனவும், சரஸ்வதி நாகரிகம் என்றால் கோடிகளை அள்ளித்தருவார்கள். தமிழ் நாகரிகம் என்றால் கட்டிடம் பழசு என காரணம் கூறுவார்கள் எனவும் விமர்சனம்.

error: Content is protected !!