India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிட்டாபட்டி பகுதியை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் போன்ற மற்றுமொரு சுற்றுச்சூழல் சீரழிவிற்கு இடம் அளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி ஆர் பி உதயகுமார் முதலமைச்சரை கண்டித்து பேசி உள்ளார். இதில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் பாமக நிறுவனர் ராமதாசை குறித்த கேள்விக்கு “அவருக்கு வேலை இல்லாததால் அறிக்கை விடுவதாக கூறியிருந்தார். இதற்கு ஆர்.பி உதயகுமார் எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுவதை கொச்சைப்படுத்துவது முதல் பதவி அழகல்ல என கூறியுள்ளார்.
மோசமான வானிலை காரணமாக மதுரையில் விமானம் ஒன்று வானில் வட்டமடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் இருந்து இன்று(நவ.,26) மதுரை வந்த இண்டிகோ விமானம், மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த வண்ணம் இருந்தது. பின்னர் ஓடுபாதை சரியானதும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி கோயிலின் உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. கோயில் துணை கமிஷசனர் செல்லத்துறை, கூடலழகர் கோயில் உதவி கமிசனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் கர்ணவ், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் பிரதீபா, அருட்செல்வன் ஊழியர்கள் பங்கேற்றனர். ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.
ரயிலில் பயணம் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு 75 % கட்டண சலுகை பெறும் நடைமுறைகளை எளிதாக்கி மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே அடையாள அட்டை பெற புதிய இணையதள வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்துகிறது. தேவையான சான்றிதழ்களைhttps://divyangjanid.indianrail.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டையும் இணையதளம் மூலமே வழங்கப்படும்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மதுரைதெற்கு வட்டத்தில் நவ.27ஆம் தேதியன்று உங்களைத்தேடிஉங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்முகாம் மற்றும் தெற்குவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெறவுள்ளது. எனவே தெற்குவட்டத்திற்குட்பட்ட அனைத்து பொதுமக்களும் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *பகிரவும்*
மதுரை மண்டலத்தின் கூட்டுறவுத்துறையின் இணை பதிவாளராக பணியாற்றிய குருமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய இணை பதிவாளராக சதீஷ்குமார் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று(நவ.25) சதீஷ்குமார் மதுரை மாடக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய இணை பதிவாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.
மதுரை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாளை ஒட்டி மேலூர் நகர்மன்ற உறுப்பினர் ரிஷி ஏற்பாட்டில் 10000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், முட்டை, தயிர்சாதத்துடன் அசைவ அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இதனை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த நிலையில் இந்த அசைவ அன்னதான விருந்தில் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரதா 39. இவருக்கு மாதவிடாயின் போது தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகாததால் மன உளைச்சலடைந்த ஜெயப்பிரதா நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடலை மீட்ட கோ.புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.