Madurai

News November 30, 2024

மதுரை மாநகராட்சி பணியாளருக்கு குட் நியூஸ்

image

மதுரை மாநகராட்சி பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியமானது, அகவிலைப்படி 50% ல் இருந்து 53 % உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது  மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அதேபோல் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வு பெறுவதற்கும் இது பொருந்தும். அதனை இன்று(நவ.30) முதல் நடைமுறைப்படுத்துவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News November 30, 2024

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் விபரம் வெளியீடு

image

மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி இன்று(நவ.30) காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களும் வெளியீடு. பேரையூர் ஊமச்சிகுளம் திருமங்கலம் மேலூர் சமயநல்லூர் உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டன.

News November 30, 2024

மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

மதுரைக்கு திரும்பிய விமானங்கள்

image

மதுரையில் இருந்து காலை 8.10 மணிக்கு 66 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்னை சென்றது. சென்னையில் பெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் தரையிறங்க முடியாமல் சென்னையில் இருந்து மீண்டும் மதுரை வந்தடைந்தது. மேலும் சென்னை புயல் காரணமாக சென்னையில் இருந்து மதுரை வரவேண்டிய நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

News November 30, 2024

லாரி, கார் நேருக்கு நேர் மோதியதில் தாய், மகன் பலி

image

மதுரை கே.கே நகரைச்சேர்ந்த வாசுதேவன் (40), மனைவி அனிதா (33) இவர்களது மகன் கனிஷ்கர் (15) ,அருண்மொழி (14) ஆகியோர் சொந்த காரில் இன்று(நவ.30) அழகன்குளம் வந்தனர். ராமநாதபுரம் கருங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியதில், அனிதா, கனிஷ்கர் இறந்தனர். காயமடைந்தோருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 30, 2024

மதுரை ரயில்வே நிர்வாகம் கடும் எச்சரிக்கை!

image

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கடந்த சில தினங்களாக ரயில்களில் கற்பூரம் ஏற்றி சாமி வழிபாடு நடைபெறுவதாக புகார் வந்ததைத்தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கற்பூரம் ஏற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குபதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டும் தமிழக அரசு

image

மதுரை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “மேலூர், அரிட்டாப்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதில், தமிழக அரசின் இரட்டை வேடத்தை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது. சுரங்கம் அமைக்க ஒத்துழைப்பையும் வழங்கி விட்டு, அதை எதிர்ப்பது போல, திராவிட மாடல் அரசு நடத்தும் பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்

News November 30, 2024

நாளை மதுரைக்கு வருகை தரும் ஆளுநர்!

image

மதுரையில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ரவி வருகை தர உள்ளார். அழகர்கோவில் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் காலை 10.45 மணியளவில் பங்கேற்கும் அவர் அதனை தொடர்ந்து சிறுகுறு தொழில் முனைவோரிடம் கலந்துரையாடுகிறார். ஆளுநர் வருகையையொட்டி மதுரையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News November 30, 2024

லஞ்சம் வாங்கிய சர்வேயர் கணவருடன் கைது

image

திருமங்கலத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (30). இவருக்க சொந்தமான இடத்தை அளக்க கொக்குளம் பீர்க்கா சர்வேயர் சித்ராதேவியை அணுகினார். ஆனால் நிலத்தை அளக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக சித்ராதேவி கேட்டு அதை அவர் கணவர் கணேசனிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.அஜித்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் கொடுத்த ரசாயன பொடி தடவிய நோட்டுகளை வைத்து கணேஸ்குமார்,சித்ராதேவியை போலீசார் கைது செய்தனர்.

News November 30, 2024

மதுரை மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் எண் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான மேலூர் உசிலம்பட்டி ஊமச்சிகுளம் திருமங்கலம் உள்ளிட்ட காவல் சரகங்களில் இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!