Madurai

News December 2, 2024

கோவை – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்

image

மதுரை: ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று(டிச.02), நாளை & 5, 6, 8 ஆகிய தேதிகளில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16722), கோவை – போத்தனூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு போத்தனூரில் நிறுத்தப்படும். அதேபோல், கோவையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16721) பதிலாக போத்தனூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.

News December 2, 2024

மதுரை: ரயில்வேயில் போர்வைகளை துவைக்கும் ஆலை

image

மதுரை : தெற்கு ரயில்வே நேற்று(டிச.01) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” ரயில்களில் ஏ. சி பெட்டியில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் 2 படுக்கை விரிப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது மதுரை, கோவையில் போர்வை, படுக்கை விரிப்புகளை துவைக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலைகள் அமையும் போது நாள்தோறும் கூடுதலாக, 7 ஆயிரத்து துணிகள் துவைக்கப்படும் ” என்று கூறப்பட்டுள்ளது.

News December 2, 2024

புயல் எதிரொலி: சென்னை செல்லும் 5 ரயில்கள் ரத்து

image

விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிஞ்சல் புயல் காரணமாக ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதால் மதுரை கோட்டத்தில் இருந்து செல்லும் முக்கிய 5 வழிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருநெல்வேலி – சென்னை வரை செல்லும் வந்தே பாரத், மதுரை- சென்னை இடையான வைகை அதிவிரைவு ரயில், காரைக்குடி- சென்னை பல்லவன் ரயில் சென்னை நாகர்கோவில் இடையான வந்தே பாரத், சென்னை தேஜஸ் ரயில் ரத்து என அறிவிப்பு 

News December 2, 2024

மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாநகர் பகுதியில் தினமும் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் காவல்துறை சார்பில் வெளியிட்டப்படும். அந்த வகையில் இன்று(டிச.1) கோவில் தெற்குவாசல், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திடீர் நகர், தல்லாகுளம், செல்லூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிட்டப்பட்டுள்ளன.

News December 1, 2024

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி; ஒருவர் பலி

image

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று(டிச.1) மாலை சுமார் 07.00 மணி அளவில் மதுரை மாநகராட்சியில் இருந்து விழுப்புரம் மாநகராட்சிக்கு வெள்ள நிவாரண பொருட்கள் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த பொறியாளர் ரமேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News December 1, 2024

மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு.

image

மதுரை மாநகர் பகுதியில் இன்று(டிசம்பர் 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2024

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கோரியது திமுக அரசு தான்  

image

மதுரை மாவட்டம், மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு கடந்த நவ.7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை ஏலத்தில் தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்க அமைச்சகம் தேர்வு செய்தது.ஏலத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் மோதிக்கு, முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த நவ.29 அன்று கடிதம் எழுதியிருந்தார். சுரங்கம் அமைக்க மத்திய அரசைக்கோரியது திமுக அரசு தான்” என அண்ணாமலை தகவல்.

News December 1, 2024

மதுரை: வங்கி மேலாளருக்கு கலெக்டர் பாராட்டு

image

மதுரை, தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், 30 % மானியத்தில், 10 பேருக்கு ரூ.33 லட்சம் கடன்தொகைக்கான காசோலை ஆட்சியரால் வழங்கப்பட்டது. மேலும், பெண் தொழில் முனைவோர்களுக்கு விரைவாக கடன் வழங்குவதற்கு அதிக ஒப்புதல் அளித்த, மேலூர், கோட்டநத்தம் பட்டி கிளை மேலாளர் கமலக்கண்ணனை பாராட்டி ஆட்சியர் கேடயம் வழங்கி கௌரவித்தார்.

News December 1, 2024

கொட்டாம்பட்டியில் சந்தன மரம் கடத்தலா?

image

மேலூர் வலைச்சேரிபட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான பழனிகோன் ஏந்தல் உள்ளது. இங்கிருந்து பாசனத்திற்கு தண்ணீர் வெளியேறும் பகுதியில் 15 வயதுள்ள இரண்டு சந்தன மரங்கள் உள்ளன.இதில் ஒரு மரத்தை கடத்துவதற்காக நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் வெட்டிப் போட்டுள்ளனர். மரத்தை கடத்துவதற்கு முன் வனத்துறையினர் மரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

News December 1, 2024

மீனாட்சி அம்மன் கோவில் 29 பணியாளர்கள் பணியிடை நீக்கமா?

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி கல்விச்சான்று கொடுத்து பணிபுரியும் 29 பேரை ‘சஸ்பெண்ட்’ செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு அறங்காவலர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பள்ளி கல்விச்சான்று அடிப்படையில் பணியில் பலர் சேர்ந்தனர். இதில் ஒருவரின் 10ம் வகுப்பு சான்றிதழ் போலி என தெரிந்தது. தொடர்ந்து அவர் ‘சஸ்பெண்ட்’, மேலும் 29 பேர் போலிச்சான்று என கண்டறியப்பட்டது.

error: Content is protected !!