India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்களுக்கான 30 நாட்கள் அழகு கலைப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தகுதியுடன் 18 முதல் 45வயது வரை உள்ள பெண்கள் நவ 1ஆம் தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த சின்னார் இடத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்ட சூளகிரி போலீசார் விபத்திற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். காலை நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பட்டது.
ஓசூர் அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக, கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சூளகிரி பகுதியில் தேடும் பணியில் நேற்று ஈடுப்பட்டனர். அப்போது ஏரி எப்பளம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் இதே பகுதியை சேர்ந்த முனியப்பன்(55) கஞ்சா செடியை பண்ணை கீரை வளர்ந்திருந்த பகுதியில் வளர்த்தது தெரிய வந்தது. போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் 53 செடிகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாசன வசதி உள்ள விவசாயிகளின் நிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிட தீவன சோளம் மற்றும் வேலிமசால் விதைகள் 100 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரை அணுகி ஆதார் அட்டை, பசுந்தீவனம் பயிரிடப்பட உள்ள நிலத்திற்கான சிட்டா, அடங்கல் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஊத்தங்கரை, கந்திகுப்பம், பர்கூர், கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, ஓசூர், சூளகிரி, பாகலூர், பேரிகை, மத்திகிரி, நல்லூர், கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1,300 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் நவ 17 ஆம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பரதநாட்டியம், ஓவியம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறுகின்றன. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் விவரங்களுக்கு சேலம் மண்டலக் கலைப்பண்பாட்டு மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டமாகவும், ஓசூர், வேப்பனப்பள்ளி, தளி ஆகிய தொகுதிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டமாகவும் திருத்தி அமைக்கப்பட்டு அதன்படி செயல்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ளதையடுத்து நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் அசோக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூர் கிட்டப்பாகுட்டையை சேர்ந்த அஸ்லாம்(38). இவரின் மனைவி நஸ்ரினுடன் அயானு(7) மற்றும் ஒரு வயதான அப்துல்லா என்ற இரு மகன்களுடன் ஓசூர் டி மார்ட் அருகே நேற்றிரவு 7.45 மணி அளவில் சாலையை கடந்தபோது அவ்வழியாக வந்த லாரி, அவர்கள் மீது மோதியதில் நஸ்ரின் அயானு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐந்து காவல் உட்கோட்டங்களிலும் இன்று இரவு ரோந்து செல்லும் காவல்துறை துணை கண்காணிப்பார்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் குறித்த விபரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கட்டுப்பட்டு அறை தொலைபேசி எண் 04343230100 க்கு இரவு நேரத்தில் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் குறைபாடுகள் தொடர்பான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள எஸ் வி வி மஹாலில் வருகின்ற 6:11/2024 தேதியில் நடைபெறும் என்றும் இதனை முன்னாள் படை வீரர்கள்/விதவையர்கள் பயன்படுத்தி ஓய்வூதிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரயு கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.