Krishnagiri

News January 9, 2025

குடியரசு தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

image

 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெறற்து. நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்குரல்,ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, தீயணைப்பு துறை,பள்ளி கல்வித்துறை,ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News January 9, 2025

பொங்கல் வாழ்த்து தெரிவித்த பர்கூர் எம்.எல்.ஏ.

image

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். 

News January 9, 2025

ஓசூருக்கு ரூ.1500 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் 

image

நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஓசூர் மாநகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.1500 கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 4 மண்டல அலுவலகங்கள், புதிய பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் கூட ரூ.547 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என கே.என் நேரு தெரிவித்தார்.

News January 8, 2025

தக்காளி நாற்றங்கன்றுகளை வழங்கிய கலெக்டர்

image

பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் தோட்டக்கலைத்துறை சார்பாக பயனாளிகளுக்கு தக்காளி நாற்றங்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு (08.01.2025) இன்று வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 8, 2025

எச்.எம்.பி.வி. தொற்று தமிழக எல்லையில் கண்காணிப்பு

image

எச்.எம்.பி.வி. என்ற நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் பெங்களூருவில் 2 பேருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக எல்லையான ஓசூரைச் சேர்ந்த மக்கள் பல்லாயிரம் பேர் பல்வேறு தேவைகளுக்காக தினமும் பெங்களூர் சென்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜுவாடி செக் போஸ்டில் வைரஸ் தொற்று கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

News January 8, 2025

 பிரத்தியங்கரா தேவி கோவிலில் யோகிபாபு சாமி தரிசனம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரனப்பள்ளி அருகே பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும் கோவிலில் மிளகாய் வத்தல் யாகம் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தக் கோவிலுக்கு நேற்று சினிமா நடிகர் யோகி பாபு வந்து அம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

News January 8, 2025

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மறியல் போராட்டம்

image

கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே ஊரக வளர்ச்சிதுறை அலுவலா்கள் சங்கத்தினா் சட்டப் பேரவைத் தேர்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 69 பேரை கைது செய்தனர்.

News January 8, 2025

ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,094 ரேஷன் கடைகள் மூலம் 5.67 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு நாளை(ஜன 9) முதல் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ஆகியவை நாளை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை அந்தந்த ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

தனியார் கல்லூரி மாணவர்கள் கோகோ போட்டியில் சாதனை

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையிலான கோகோ விளையாட்டு போட்டி நாமக்கல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி சார்ந்த மாணவர்கள் நான்காம் இடத்தை பெற்றனர். கல்லூரி முதல்வர் சு தனபால் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

News January 7, 2025

கிருஷ்ணகிரி மாணவி முதலிடம் பிடித்து சாதனை 

image

பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், நாகரசம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரா.நேசிகா முதல் பரிசு பெற்றார். மாணவிக்கு முதலமைச்சர் பரிசு வழங்கியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

error: Content is protected !!