India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கெம்பட்டி, பேளகொண்டபள்ளி, மதகொண்டபள்ளி, முத்தூர், கப்பக்கல், பாரந்தூர், கோபனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரி,ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. ஆகிய அணைகளில் இருந்து 2ஆம் போக சாகுபடிக்கு கடந்த பல நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து போச்சம்பள்ளி காவேரிப்பட்டினம், பெரியமுத்தூர்,அவதானப்பட்டி,பாரூர், அரசம்பட்டி,பண்ணந்தூர், புலியூர் பகுதிகளில் 2ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்று, வரும் மக்களுக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. கடந்த 11-ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், நேற்று(ஜன.17) பண்டிகை முடிந்து திரும்பி சென்றபடியாக செல்கின்றனர். இருப்பினும் சேலத்திலிருந்து பெங்களூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறம்பி வழிவதால் நின்றுக்கொண்டே செல்கின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் விழா தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் அம்மனேரியில் எருது விடும் விழா இன்று(ஜன 18) நடைபெற்று வருகிறது. அதை way2news-இல்<
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமியின் 100வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இராமகவுண்டர் கலந்துக் கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக விளங்கும் KRP அணையில் தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிக்கூடங்களும் அரசு அலுவலகங்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கேஆர்பி அணைக்கு, நாள் பொழுதைக் கழிக்க குடும்பத்துடன் வந்திருந்தனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ஜாலியாக பூங்கா மற்றும் மான், முயல் ஆகிவற்றை கண்டு ரசித்தனர். வெயில் நேரங்களில் குளித்து மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 21ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் சப்ளை இருக்காது என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். பாலக்கோடு அருகில் உள்ள பிரதான குடிநீர் குழாயை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஒகேனக்கல் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பர்கூர் தாலுகா சிந்தகம்பள்ளியை சேரந்தவர் செல்வகுமார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் இவருடைய மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மல்லிநாயனப்பள்ளி அடுத்த எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் வெங்கடேசன் மாற்றுத்திறனாளி. எலுமிச்சங்கிரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நடந்த பிரச்சனை தொடர்பாக வெங்கடேசன் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மதியம், வெங்கடேசன் எலுமிச்சங்கிரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு தனது உடல் மீது டீசலை ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்னர்.
மத்தூர் அருகே இருளர்வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (47). இவர் மோட்டார்சைக்கிளில் வேட்டியம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை அருள் என்பவர் ஓட்டி சென்றார். இவர் பின்னால் அமர்ந்து இருந்தார். அந்தநேரம் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் .
Sorry, no posts matched your criteria.