India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த<
இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த<
ஓசூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு விசாரித்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை. பின்னர் அவரது உடல் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கிருஷ்ணகிரி, கெலமங்கலம் அருகே குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியப்பா; நேற்று மதியம், 3:00 மணிக்கு இவரது வீட்டின் அருகே கொட்டகையில் திடீரென தீப்பிடித்தது. தேன்கனிக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், கொட்டகையில் கட்டப்பட்டிருந்த சினையாக இருந்த ஒரு கறவை மாடு மற்றும் கன்று குட்டி தீயில் கருகி உயிரிழந்தது.
அஞ்செட்டி, கடுகுநத்தத்தை சேர்ந்த சின்னதுரை – பிரீத்தா தம்பதியின் மகன் பிரசாந்த்,(4). மார்ச் 30ல், வீட்டு மாடி படிக்கட்டில் தவறி விழுந்ததில் குழந்தையின் தொடையில் அடிபட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று குழந்தை ஜன்னி வந்து இறந்ததாக கூறியுள்ளனர். 4 வயது குழந்தை இறப்புக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு இரண்டு மாதங்களாக ஆங்காங்கே விவசாயிகளின் நில உடமை சரி பார்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நில உடைமைகளை இதுவரையில் இணைக்காமல் உள்ளனர். இதனால் உடனடியாக அருகில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஏப்ரல் 15க்குள் இணைக்க வலியுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த அரியனப்பள்ளி கிராமத்தில் நேற்று (ஏப்ரல் 10) இப்பகுதி மக்கள் சார்பாக மாபெரும் கன்றுவிடும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட காளை கன்றுகள் பங்கேற்றன. விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
▶️கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் 04343239400 ▶️கிருஷ்ணகிரி மாநாகராட்சி ஆணையர் 04344-247666 ▶️ கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையம் 9445086362 ▶️ மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் 6374714242 ▶️கிருஷ்ணகிரி போக்குவரத்து துறை 04343230214 ▶️ கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் 04343236396 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.