Krishnagiri

News April 15, 2025

பாலியல் தொல்லை; கிருஷ்ணகிரி இளைஞர் கேரளாவில் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் டேனியல்(29). பெங்களூரில் தனியார் கார் ஷேரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இரண்டு இளம் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டு வட்டு தப்பித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாக நிலையில், கேராளாவில் பதுங்கியிருந்த சந்தோஷை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News April 14, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 14, 2025

காவிரி ஆற்றில் சிறுமிகள் மூழ்கி பலி

image

தேன்கனிக்கோட்டை அருகே முத்துராயன்கொட்டாய் சேர்ந்த இரண்டு குடும்பத்தினா் இன்று விடுமுறைக்காக ஒகேனக்கல் சென்றனர். அப்போது ஆலம்பாடி ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடும் போது பாக்கியலட்சுமி மற்றும் காவிய இருவரும் ஆழமான பகுதிக்குள் சென்று நீச்சல் தெரியாமல் உயிர் இழந்தனர். காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உதவியுடன் அரை மணிநேரம் போராடி ஆற்றில் இருந்து உடலை மிட்டனர்.

News April 14, 2025

திடீர் மின் தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 14, 2025

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவர் போக்சோவில் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகராட்சியில் உள்ள கடை ஒன்றில் நேற்று சாக்லேட் வாங்க வந்த 8 வயது சிறுமிக்கு கடைக்காரர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஒசூா் அனைத்து மகளிா் போலீசார் வழக்குப் பதிவு செய்து மளிகை கடை உரிமையாளா் சிவசங்கா் (56) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 13, 2025

இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 13, 2025

தீராத நோய் தீர்க்கும் கந்தர்மலை முருகன் கோவில்

image

காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் கந்தர்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ‘வள்ளி குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. நாளை தமிழ் புத்தாண்டுடை ஒட்டி இக்கோயிலுக்கு சென்று இங்குள்ள குளத்தில் நீராடினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும். மேலும் குளத்தின் தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால் சகல தோஷங்களும் நீங்கும், வியாபாரம் விருத்தியாகும். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

ஐடிஐ முடித்திருந்தால் போதும் ரயில்வேயில் வேலை

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

கிருஷ்ணகிரியில் மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

image

திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் முனியம்மாள்(70). இவரது கணவர் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், மகன், மருமகளுடன் வசித்து வந்தார். கடந்த, 8 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற முனியம்மாள் மாயமான நிலையில், நேற்று முன்தினம் கும்மனுார் தென்பெண்ணையாற்றில் சடலமாக மிதந்தார். மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News April 13, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!