India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.இந்நிலையில் ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு (சார்-ஆட்சியர் அலுவலகம் உள்பட) வரும் மார்ச் 14-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மார்ச்.14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோயில் தோரொட்டம் மார்ச்.14 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகா, அரசு அலுவலகம், அரசு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுள்ளது. மேலும் மார்ச்.14ல் அரசு பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்டம் தேவசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. போதுவாக அனுமன் கோயில்களிலும் வடைமாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுவார்கள். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது கஷ்டங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி – சேலம் சாலையில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ நவநீத வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோயிலை இடிக்க போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் செய்தி பரவி வந்ததது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் கலை கோபியை போலீசார் இன்று(மார்ச்.11) கைது செய்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்.12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை <
கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் , கோட்டையூர் மற்றும் தக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பரவலாக புளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தனித்துவமான உரிகம் புளி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது விவசாயிகள் புளி அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகனின் தந்தை வரதராஜ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது ஆத்மா சாந்தி பெற வேண்டி, திட்டமிட்ட நாளிலேயே அவரது முன்னிலையில் மகன் மணிஷ், மணப்பெண் காவிய பிரியாவைத் திருமணம் செய்தார். இந்த உணர்வுப்பூர்வ நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
பண்ணத்தூர் கிராமத்தில் ஐந்து ஆண்டுகளாக மூவரிடையே நில தகராறு இருந்த நிலையில் நேற்று மார்ச் 9ஆம் தேதி மாலை நிலத்திற்கு நீர் இறைக்கும் போது ஏற்பட்ட விவகாரத்தில் மாலை 7 மணி அளவில் ராமகிருஷ்ணன் மற்றும் திருமால் என்ற இருவர் கற்களை கொண்டு தாக்கியதில் சக்திவேல் என்பவர் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். சக்திவேல் உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.