Krishnagiri

News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர்<>. தகுதி அடிப்படையில்<<>> ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 28, 2025

டாஸ்மார்க் கடை அருகே கல்லூரி மாணவர் சடலம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து அம்மன் கோவில்பதி பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே இளைஞர் ஒருவர் சடலமாக கிடைப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கல்லாவி போலீசார் நேரில் சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் அரூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன்(21) என்பதும், மொரப்பூரில் உள்ள கொங்கு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் இல் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

News February 28, 2025

மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முன்னேற்பாடு பணிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தலைமை வகித்து பேசினார். மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் வரும் மார்ச் 3 துவங்கிய 25 வரையிலும் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 5 முதல் 27 வரையிலும் நடக்கின்றன.

News February 28, 2025

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், இணை இயக்குநர் (வேளாண்மை) பச்சையப்பன், இணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) திருமதி.இந்திரா, கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் நடராஜன் மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளனர்.

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். <>விருப்பம் உள்ளவர்கள்<<>> வரும் மார்ச் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

image

பாகலூர் அடுத்த கூசனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜூ (44). பெட்டிக்கடை நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில் ராஜூ வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பாகலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். வீட்டின் பின்புறம் 715 கிலோ அளவிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் ரூ.3 கோடியாகும்.தலைமறைவான ராஜூவை போலீசார் தேடி வருகின்றனர்.

News February 26, 2025

காரில் கஞ்சா கடத்தியதில் ஒடிசா வாலிபர் கைது

image

ஓசூர் அடுத்து பாகலூர் அருகே கக்கனூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் போலீசார் இருந்தனர். அப்போது அங்கு வந்தகார் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் 15கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதை விசாரித்த போலீசார் ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த ஜோசோபந்தா மொகாந்தி 24 வயது கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கார், செல்போன் மற்றும் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News February 26, 2025

உரிகம் மலைப்பாதையில் விபத்து 10 பேர் படுகாயம்

image

உரிகம் மலைப்பாதையில் வேலி அமைக்கும் கற்களை ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் நேற்று விபத்துக்குள்ளானது. அதன் மீது பயணிகள் ஆட்டோ மோதி அடுத்த விபத்து நடந்தது. இந்த இரு விபத்துகளிலும் வாகனங்களில் பயணித்த 2 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 25, 2025

பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

image

தமிழக அரசுகொண்டு வந்துள்ள பத்திரிக்கையாளர் நலவாரியம் பணமுதலாளிகளை உறுப்பினராகவும், மாவட்ட நிருபர்களை மட்டுமே கொண்டு செயல்பட்டுவருகிறது. வட்டார நிருபர்கள், புகைப்பட கலைஞர்களுக்கும் பத்திரிக்கை நலவாரியத்தில் இடமளிக்கவேண்டும், செயல்படாமல் இருக்கும் பத்திரிகை நலவாரியம் மற்ற நிருபர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கவேண்டு என பத்திரிக்கை சங்கத்தினர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

News February 25, 2025

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், 08.03.2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு ஐ.டி.ஐ./டிப்ளமோ/ வரை பொறியியல் படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!