India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் <

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளர் கல்வி மையம் அமைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று (ஜன.12) நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு, தனி வட்டாட்சியர் சம்பத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நேற்று (ஜன.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் 2025-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான விருதுகளுக்கு தேர்வான 8 அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக பொங்கல் விழா நேற்று (ஜன.12) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கார்த்திக், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.சௌ.கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே! பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

பந்தாரப்பள்ளி, ஓசூர்-கிருஷ்ணகிரி NH-ல் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாகி அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த மூதாட்டி யார்? என விசாரித்து வருகின்றனர்.

பெரிய ஜோகிப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் (52) நேற்று முன்தினம் (ஜன.12) தனது சித்தியான முருகம்மாளுடன் (54) துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு சாமல்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி – தி.மலை NH-இல் பின்னால் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முருகம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து மத்தூர் போலீசார் விக்னேஷ் (27) எனபவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.