India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சூளகிரி அடுத்த இம்மிடிநாயக்கனப்பள்ளியை சேர்ந்த டிரைவர் மாரப்பன் (35). இவர் ஓசூர் தோட்டகிரி அலசநத்தம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 11-ந் தேதி இவர் கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டையனூர் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர் அடுத்த ஜூஜூவாடியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சீனிவாசன் (47). இவர் கடந்த 11-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பெங்களூரு-ஓசூர் சாலையில் சேற்று கொண்டிருந்தார். அப்போது ஜூஜூவாடி அருகே அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குளானது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி அடுத்த அந்தேவனப்பள்ளி கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவரின் பேக்கரியில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் பொருட்களை நேற்று முன்தினம் ஜன-12 வாங்கி கொண்டு பணம் கொடுக்காததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேன்கனிகோட்டை போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.*செம திட்டம். தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<

கிருஷ்ணகிரியில் ரிக் உரிமையாளர்கள் நேற்று (ஜன.13) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரிக் தொழிலில் உதிரி பாகங்கள், ஆயில், டீசல் உள்ளிட்டவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹைதர் அலி கூறியுள்ளார்.

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<

கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நேற்று (ஜன.12) பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பூவத்தி பகுதி எஸ்.சி, எஸ்.டி. மக்களின் பயன்பாட்டில் உள்ள கோயிலையும், நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தோடு ஒரு பிரிவினா் திட்டமிட்டு செயல்படுவதாகவும் மாவட்ட நிா்வாகம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இது அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <
Sorry, no posts matched your criteria.