India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராயக்கோட்டை பேருந்து நிலையம் கட்டி சுமார் 30 வருடங்களாகிறது. அது பராமரிப்பின்றி செயல்பட்டு வந்ததால் பேருந்து செல்லக்கூடிய தரை முழுவதும் சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பேருந்து டயர்கள் விரைவில் பழுதாகும் நிலை ஏற்படுகிறது. அதோடு பயணிகளும் அச்சத்தோடு செல்கின்றனர். இதனை சீரமைக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலத்தில் கலைஞர் கருணாநிதி 101வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், நகர செயலாளர் தஸ்தகீர் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவை முன்னிட்டு திமுக கொடியை ஏற்றி வைத்து, கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை போலீசார், வெப்பாலம்பட்டி அருகே பெட்டி கடையில் மது விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி அந்தப் பகுதியில் ஒரு பெட்டி கடையில் மது விற்பனை செய்த லட்சுமி (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து 8 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓசூரில் பகுதியில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற 381 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நாகேஸ்வரன் வரவேற்றார். இதில், இன்போசிஸ் நிறுவன துணைத்தலைவர் விக்டர் சுந்தர்ராஜ் கலந்துகொண்டு தேர்வான மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார்.
நாடாளுமன்ற தேர்தலின் போது பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்படுகிறது. அப்போது தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதையொட்டி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில், முகவர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் நேற்று (மே.31) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயக்கோட்டையில் 3 செ.மீட்டரும், பாம்பார் அணையில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 12 கன அடியாக நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர், பாரூர் ஏரிக்கு செல்லும் வகையில் விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் முதல்போக சாகுபடி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க முடியுமா என்கிற அச்சத்தில் இருந்த பாரூர் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கிரிஷ்ணகிரியில் உள்ள மல்லசந்திரம் எனும் பகுதியில் அமைந்துள்ளது மல்லசந்திரம் டோல்மென்ஸ். புதிய கற்காலம் தொடங்கி தற்காலம் வரை, தொடர்ச்சியான வரலாற்றை கொண்ட இம்மாவட்டத்தில், கற்கால சின்னம் ஒன்று உள்ளது. அதிகம் அறியப்படாத பொக்கிஷமாக இருக்கும் இதில் ஆதி மனிதர்கள் இருந்ததற்கான அடையாங்களும் எச்சங்களும் கிடைக்க பெறுகின்றன. இந்த டால்மன்கள் பல சேதமடையாமல் அப்படியே காட்சியளிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் அண்ணா நகர் பகுதியில் நேற்று (மே 31) மாலை 7 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, இடி, மின்னல் தாக்கி விவசாயி சின்னசாமி என்பவரின் 1 லட்ச ரூபாய் மதிக்கத்தக்க பசு இறந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பசு இறந்ததால் விவசாயிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.