Krishnagiri

News February 13, 2026

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து!

image

காவேரிப்பட்டினம் அடுத்த பாலேகுளி கிராமத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவர் நேற்று (பிப்-12) வேலம்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிரே பைக்குள் வந்த மணிவண்ணன் மீது மோதியுள்ளார். இதில் அருள்முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மணிவண்ணன் படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2026

கிருஷ்ணகிரியில் தீயில் கருகி பலி!

image

சிங்காரபேட்டை அடுத்த கீழ்மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் நேற்று (பிப்.12) வீட்டில் தனியாக இருந்த போது திடிரென மின்கசிவு ஏற்பட்டது. அப்போது பெட் ரூமில் திடீரென தீ பிடித்தது. அதில் ரவியின் மேல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. ரவியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் ரவியின் கருகிய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.13) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

News February 13, 2026

கிருஷ்ணகிரியில் தூக்கிட்டு தற்கொலை!

image

மத்திகிரி அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு தொடர் குடிபழக்கம் இருந்துள்ளது. இதனால் இவருடைய குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு சில தினங்களுக்கு முன்பு அவருடைய மகள் தனியாக சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் நேற்று (பிப்.12) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2026

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

image

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி என்பவருடைய மகன் 2 வயது ருத்ரன் நேற்று பிப்-12 விட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். நீண்ட நேரமாக பெற்றோர் அவரை தேடி பார்த்தபோது குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2026

கிருஷ்ணகிரி: ரோந்து பணி விவரங்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் (பிப்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

கிருஷ்ணகிரி: ரோந்து பணி விவரங்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் (பிப்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

கிருஷ்ணகிரி: ரோந்து பணி விவரங்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் (பிப்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

கிருஷ்ணகிரி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிப்ரவரி 12 இரவு 10 மணி முதல் நாளை பிப்ரவரி 13 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 12, 2026

கிருஷ்ணகிரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!