Krishnagiri

News July 10, 2024

கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

image

கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் மதகுகள் சரிசெய்யப்பட்டு வந்தததால், கடந்த இரண்டு போகங்களுக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. மதகுகள் சரிசெய்யப்பட்ட நிலையில், அணையிலிருந்து இரண்டு பிரதான கால்வாய்கள் மூலம் 120 நாட்கள் முதல் போக பாசனத்திற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, கிருஷ்ணகிரி எம்பி.கோபிநாத் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.

News July 10, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி போதைப்பொருள் குறித்து சபதம்

image

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு போதைப் பொருள்களின் தீங்கு குறித்தும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிராக போராடவும் சபதம் ஏற்போம் என மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா பேசினார். உடன் மதுவிலக்கு டிஎஸ்பி சிவலிங்கம் இருந்தார்.

News July 9, 2024

அரசு இசைப்பள்ளியில் கிராமிய கலை பயிற்சிகள்

image

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் ஜூலை 12 ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பகுதிநேர கிராம கலை பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வருகிறது. நாடகம், புரவியாட்டம், பம்பை, சேவையாட்டம் கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. 17 வயதுக்கு மேற்பட்டோர் சேரலாம்; பயிற்சி கட்டணம் ஆண்டுக்கு ரூ.500 மட்டும்; வெள்ளி, சனி கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணிவரை பயிற்சி நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

நாட்டுக் கோழி பண்ணை நிறுவ 50% மானியம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50% மானியம் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு இன்று தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

அரசு விடுதிகளில் தங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அனைத்து விடுதிகளிலும் சேர விரும்பும் அனைத்து ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் ஜூலை 12 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமிருந்து பெற்று முழுமையாக பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். இந்த வாய்ப்பினை மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

News July 5, 2024

9,817 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ‘ரத்த நன்கொடையின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம் ரத்த கொடையாளருக்கு நன்றி’ என்ற கருபொருளுடன் பின்பற்றபட்டது . மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 107 ரத்த தானம் முகாம்கள் மூலம் 9,817 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டம ஆட்சியர் கே. எம் சரயு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News July 4, 2024

9,817 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ‘ரத்த நன்கொடையின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம் ரத்த கொடையாளருக்கு நன்றி’ என்ற கருபொருளுடன் பின்பற்றபட்டது . மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 107 ரத்த தானம் முகாம்கள் மூலம் 9,817 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டம ஆட்சியர் திருமதி. கே. எம் சரயு அவர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News July 4, 2024

14 தூய்மை பணியாளர்களுக்கு ஆணைகள் வழங்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தில், தாட்கோ திட்டத்தின் கீழ் 14 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.18 இலட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் வீடு வழங்குவதற்கான ஆணைகளை தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு எம்.வெங்கடேசன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., முன்னிலையில் நேற்று 03.07.2024 வழங்கினார்.

News July 2, 2024

ஓசூர் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்னலாடை, தையல் இயந்திரம் இயக்குதல் தொடா்பான பயிற்சி வகுப்புக்கு நேரடி மாணவர் சோ்க்கை நாளை தொடங்குகிறது. இதற்கு 8 ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற 18 – 40 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் சேர்க்கை கட்டணம் முறையே ரூ.50, ரூ.100 ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், திறன் பேசி உள்ளிட்ட கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு இன்று வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் உள்ளனர்

error: Content is protected !!