Krishnagiri

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார். இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 தோ்ச்சி,பட்டதாரிகள்,ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 16, 2024

குழந்தைகளை கண்டறிய ஆலோசனை

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக, பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு மற்றும் பள்ளியில் சேராத குழந்தைகளை கண்டறிய திட்டமிடல் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News July 16, 2024

சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

image

சகி என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி, ஆலோசகர் மற்றும் வழக்கு அலுவலர்கள் ஆகிய பதவிகளில் பணிபுரிய தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் 26.07.2024 மாலை 5 மணிக்குள் அறை எண்:21 மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

கிருஷ்ணகிரியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு

image

அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

இலவச தையல் எந்திரம் வழங்கிய கலெக்டர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக, 6 பயனாளிகளுக்கு ரூ.36 ஆயிரத்து 720 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு நேற்று வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பன்னீர் செல்வம் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News July 15, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆண்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News July 15, 2024

காலை உணவு திட்டம் தொடக்கம்

image

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் இன்று (ஜுலை.15) காலை எலத்தகிரி கிராமத்தில் புனித அந்தோணியார் துவக்க பள்ளியில் தொடங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் திரு.மதியழகன், நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், மாவட்ட ஆட்சியர் சராயு ,ஊராட்சி மன்ற தலைவி ஜெசிந்தா வில்லியம் ஆகியோர் 150 மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கி இத்திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

News July 15, 2024

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

image

தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஜூலை.18 இல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரயு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதன்படி 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் 19 ஆம் தேதி காலை 9 வரை தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள கிராமங்களில் ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.

error: Content is protected !!