India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொள்ள உள்ளார். காலை 10 மணிக்கு குருபரபள்ளி, சிக்காரிமேட்டில் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியும், காலை 10.30 மணிக்கு, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை இயக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் இந்தியன் வங்கி சார்பில் ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் , மகளிர்க்கான சிறு, குறு தொழில் வங்கிக்கடன் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், சிறு, குறு தொழில்கள், மகளிர்க்கான குழு கடன்கள் அனைத்து வங்கிகளிலும் ரூ. 25 லட்சம் வரை பெற முடியும் என வங்கி மேலாளர் மோகன் கூறினார். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் , வியாபரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணா என்பது கருப்பு என்றும், கிரி என்பது மலை என்றும் பொருள். கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் கிருஷ்ணகிரி என பெயர் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்ததால், இம்மன்னர் பெயரிடப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. உங்களுக்கு கிருஷ்ணகிரியை பிடிக்குமா? கமெண்ட் செய்யவும்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் தொரப்பள்ளியில் மூதறிஞர் ராஜாஜி பிறந்தார். இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநராக இவர்தான் இருந்தார். முதல் முறையாக பாரத ரத்னா விருது பெற்றவர்களில் ராஜாஜியும் ஒருவர். சென்னை மாகாண முதலமைச்சராகவும் இருந்துள்ளார். பல சாதனைகளை புரிந்துள்ள மூதறிஞர் ராஜாஜி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்தது தனிச் சிறப்பாகும். ராஜாஜியை உங்களுக்கு பிடிக்குமா??
கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஓசூர் வனக்கோட்டம் 1,492 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை விளை நிலங்களில் அவ்வப்போது புகுந்து அவற்றை சேதப்படுத்துவதுடன் உயிர் பலியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 17 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தி, பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ககனகிரி எனும் பெரியமலைக் கோட்டை கிருஷ்ணகிரியிலிருந்து 27 கி.மீ தூரமும், ஓசூரிலிருந்து 67 கி.மீ தொலைவிலும், ஊத்தங்கரையிலிருந்து 45 கி.மீ தொலைவிலும் உள்ளது. மலையேற்றம் செல்ல சிறந்த இடமாகவும் இந்த மலைக்கோட்டை உள்ளது. மலையேற்றம் மற்றும் கோவிலுக்கு செல்ல விரும்புவோர் முதலுதவி வசதியோடு சென்றால் பயணம் பாதுகாப்பாக இருக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரம். ஊத்தங்கரை – 9498167897, பர்கூர் – 9498106530, கிருஷ்ணகிரி – 9498167900, ஓசூர் – 9498169256, தேன்கனிக்கோட்டை – 9498166367. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓசூர் வனச்சரகத்தில் வாகன விபத்தில் 34 வன விலங்குகள் உயிரிழந்துள்ளது. 20 மான், யானை, காட்டுப்பன்றி மற்றும் காட்டெருமை தாலா ஒன்று வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 20 மான்களின் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் இந்தியன் வங்கி சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள், சிறுகுறித் தொழிலாளர்கள், மகளிர் வங்கி கடன் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்தார். இதில் தொழில் முனைவோர் அனைவருக்கும் வங்கி கடன் கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது, அதனை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறுசேமிப்புத்துறை சார்பாக, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு கேடயங்கள், பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கே.எம்.சரயு இன்று வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) முரளிதரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.