Krishnagiri

News March 1, 2026

கிருஷ்ணகிரியில் பயங்கர தாக்குதல்!

image

கந்திகுப்பம் அடுத்த அழகிய புதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டு பிரகாஷை பீர் பாட்டிலால் பாபு தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பாபு உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2026

கிருஷ்ணகிரியில் பெண் துடிதுடித்து பலி!

image

காட்டிநாயனப்பள்ளியைச் சேர்ந்தவர் மோலுகம்மா. இவர் நேற்று முன்தினம் கிராமத்தின் அருகே சாலையோரத்தில் நடத்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அருண்குமார் என்பவர் மோதியதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவல்துறை காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட உட்கோட்ட பகுதிகளில் நேற்று (28.02.26) இரவு முதல் இன்று காலை வரை காவல்துறை ரோந்து பணிக்கான காவலர்களின் விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளில் இரவு நேர ரோந்து போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களின் அலைபேசி எண்களும் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன.

News February 28, 2026

கிருஷ்ணகிரி: குடும்பத்தில் பிரச்னையா?

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 6379860065 -ஐ அழைத்து புகார் அளிக்கலாம். *இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 28, 2026

கிருஷ்ணகிரி: சிலிண்டர் உள்ளதா? இத தெரிஞ்சிக்கோங்க

image

கிருஷ்ணகிரி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது <>இந்த<<>> இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணு

News February 28, 2026

ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு மார்ச் 3-இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுகாவில் மட்டும் மார்ச் 3-ல் உள்ளூ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 14-ல் முழு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ஷேர் பண்ணுங்க”

News February 28, 2026

கிருஷ்ணகிரியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News February 28, 2026

கிருஷ்ணகிரி: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, கிருஷ்ணகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News February 28, 2026

கிருஷ்ணகிரி:இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய அதிமுக நிர்வாகி!

image

ஊத்தங்கரை தனி தொகுதியில் போட்டியிடுவதற்கு காமாட்சி பட்டியை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் நாகரத்தினம் விருப்பம் தெரிவித்து இபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 40 ஆண்டு காலமாக கட்சிக்காக உழைப்பதாகவும் 1985 முதல் தற்போது 2026 வரை 9 முறை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் இதுகுறித்து பரிசீலிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

News February 28, 2026

கிருஷ்ணகிரியில் துடி துடித்து பலி!

image

அசாம் மாநிலத்தை சேர்ந்த மானிக் டெப்நாத் என்பவர் ஓசூர் அடுத்த பத்தளப்பள்ளி பகுதியில் ராமகிருஷ்ணா என்பவருடைய நிலத்தில் வேலை செய்து வந்துள்ளார். பிப்-26 அப்பகுதியில் எதிர்பாரத இருந்த கிணற்றில் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் இறந்து போனார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!