India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் கோபிநாத் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக.கிருஷ்ண மூர்த்தி, நாராயணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. அதன்படி விமான நிலையங்கள் அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பரிந்துரையை இந்திய விமான ஆணையத்துக்கு தமிழக அரசு அனுப்பி உள்ள நிலையில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இருப்பினும் அந்த இடங்களின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஓசூர், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு இன்று ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கிறிஸ்துவ தேவாலயங்களி பணியாற்றும் உபதேசியார்கள், வேதியார்கள், பாடகர்கள் , கல்லறை பணியாளர்கள் போன்றோர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதில் சேருவதற்கான விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து பெற்று விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னாள் முப்படை துணை இராணுவ வீரா்கள் சார்பில் நாளை(ஜூலை 28) 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. இது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆவின் பால் டெய்ரி எதிரில் உள்ள தொன்போஸ்கா மெட்ரிக் பள்ளியில் காலை 10 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. இவ்விழாவினை கிருஷ்ணகிரி முன்னாள் துணை இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை முழுமையாக நிரம்பி வருகிறது. அணையின் முழுக்கொள்ளவான 52 அடிகளில் தற்போது அணை 51அடிகளை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பியதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், இணை இயக்குநர் பச்சையப்பன் மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளனர்.
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், எம். வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியான ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலை கலெக்டர் சரயு இன்று வழங்கினார். அப்போது பருகூர் எம்எல்ஏ உடனிருந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ஆகாஷ் ஹரி ( 16 வயது) 2018 ல் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமுற்று அசைவற்ற நிலையில் வசித்து வருகிறார். அச்சிறுவனும் அவரின் தாயும் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தனர். சிகிச்சைக்கு உதவிட சிறுவனின் தாய் கோரினார். எனவே உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது பெய்த லேசான மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கே.ஆர்.பி.அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது. இன்று நீர்மட்டம், 51அடியை எட்ட உள்ளது. அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.