India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL2 to FL11 (FL6 தவிர) என அனைத்தும் ஆக.16ஆம் தேதி காலை 12.00 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீ.): நெடுங்கல் 123.20, போச்சம்பள்ளி 97, கிருஷ்ணகிரி 76.2, பாரூர் 74, கிருஷ்ணகிரி அணை 73, ஊத்தங்கரை 49, தேன்கனிக்கோட்டை 47, ஒசூர் 32.90, பாம்பாறு அணை 30, சின்னாறு அணை தலா 10, அஞ்செட்டி 3.4, சூளகிரி 3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக 16ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் உள்ளிட்ட அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், மலையாண்டஅள்ளி, செட்டிமாரம்பட்டிமாரி, செட்டிஅள்ளி சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதையும், மழைநீரை வெளியேற்றும் பணியையும் ஆட்சியர் பார்வையிட்டு கால்வாய்களை சீரமைத்து மழைநீர் உடனடியாக வெளியேற நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மழைநீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சின்ன ஆலரஅள்ளி பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ரூ. 18 லட்சம் மதிப்பில் 5000க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் இருந்துள்ளது. மேலும், நேற்று முன்தினம் பெய்த கனமழையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இவை தண்ணீரில் மூழ்கி இறந்தன. இது குறித்து பண்ணையின் உரிமையாளர் அக்கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதன் படி விஏஓ விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பொழிவு குறித்து பதிவிடவும்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோ-ஆப்டெக்ஸ் சார்பில் 10 வது தேசியக் கைத்தறி தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சியை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு இன்று (அகஸ்ட்-12) குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸின் வருவாய் அதிகரிக்க இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் பல பகுதிகள் பாதிப்படைந்தன. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து 3வது நாளாக பரவலாக கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): ஊத்தங்கரையில்- 72.60, பாம்பாறு அணை- 62, கிருஷ்ணகிரி- 58, போச்சம்பள்ளி- 19.40, பாரூர்- 15, பெனுகொண்டாபுரம்- 7.30, கேஆர்பி டேம்- 4.60, நெடுங்கல்- 4.80, ஓசூர்- 3.50, அஞ்செட்டி- 2 என மொத்தம் 251 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் அநேக இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.