India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இது வரை 1,02,058 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் போட்டித் தேர்வில் 162 பேர் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை என போலி முகாம் நடத்தி மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சிவராமன் மற்றும் அவரது கும்பல் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகில் நாளை 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23.08.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் தனியார் பள்ளியில் என்.சி.சி பயிற்சி முகாமிற்கு சென்ற 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதில் போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும், இதனுடன் இவ்வழக்கில் தொடர்புடைய 11 பேரை இதுவரை கைது செய்துள்ளன்னர். இந்நிலையில் இதில் தொடர்புடைய உதவி பயிற்சியாளர் சுதாகரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.கிருஷ்ணகிரியில் தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 115 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏரளாமானோர் விண்ணப்பித்திருந்தனர்.<
மனுக்கள் குழு தலைவர் செழியன் தலைமையில் இன்று மனுக்கள் குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, கண் பார்வையற்ற மற்றும் காது கேளாதோர் என 55 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 34 ஆயிரத்து 195 மதிப்பிலான திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு வழங்கினார். உடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, கண் பார்வையற்ற மற்றும் காது கேளாதோர் என 55 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 34 ஆயிரத்து 195 மதிப்பிலான திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று வழங்கினார். உடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்
Sorry, no posts matched your criteria.