India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

கரூரில் கோடை தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தச் சூழலில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி பகுதிகளில் வெயிலில் நின்று பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்குச் சூரியசக்தி தொப்பிகள் (Solar Caps), இளநீர், நீர்மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் உடல்நலனைக் காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த்தாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் டவுன், வெங்கமேடு, வெள்ளியணை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த ரவிச்சந்திரன், செந்தில்குமார், வடிவேல் 3 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.1) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில், 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 10,866 மாணவர்கள், மாணவிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். இதில் 5,038 மாணவர்கள் மற்றும் 5,828 மாணவிகள் அடங்குவர். நாளை தொடங்கும் பிளஸ் டூ தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம். இந்த தகவலை SHARE செய்யவும்.

கரூர் மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு. 9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும். பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHAREபண்ணுங்க.

1. கரூர் – 04324-260745
2. அரவக்குறிச்சி – 04320-230170
3. குளித்தலை – 04323-222015
4. கிருஷ்ணராயபுரம் – 04323-243366
5. மண்மங்கலம் – 04324-288334
6. கடவூர்- 04323-251444
7. புகளூர் – 04324-270370
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

ஈரோடு-கரூர் இடையே ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் மார்ச் 1, 5, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, திருச்சி-ஈரோடு மற்றும் செங்கோட்டை-ஈரோடு ரயில்கள் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஈரோட்டிற்குப் பதில் கரூரிலிருந்து மதியம் 3:05 மணிக்குத் தொடங்கும். இடையில் உள்ள ரயில் நிலையங்களுக்குச் சேவை இருக்காது.
Sorry, no posts matched your criteria.