Karur

News March 3, 2026

கரூர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

கரூர்: இனி EB ஆபீஸ்-க்கு அலைய தேவையில்லை!

image

கரூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். (அ) 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News March 3, 2026

கரூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 3, 2026

கரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது

1. வகை: மத்திய அரசு வேலை

2. பணியிடங்கள்: 252

3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்

4. சம்பளம்: ரூ.20,000

5. தகுதி: 12ஆம் வகுப்பு

6. கடைசி தேதி: 10.03.2026

7. <>விண்ணப்பிக்க: CLICK HERE<<>>

இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

கரூரில் பரிசு வழங்கிய செந்தில் பாலாஜி!

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் வடக்கு மாநகரப் பகுதியில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி 73 கிலோ மெகா கேக் வெட்டிக் கொண்டாடினார். தொடர்ந்து, வார்டுகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்

News March 3, 2026

கரூரில் தீயில் கருகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

image

வேலாயுதம்பாளையம் செம்பாடாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்லி அன்பரசி (47), வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் தீக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவர் இறந்த துக்கத்தில் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை.

News March 3, 2026

கரூரில் 175 பேர் ஆப்சென்ட் – கலெக்டர் ஆய்வு!

image

கரூர் மாவட்டத்தில் 47 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. புனித தெரசா பள்ளியில் கலெக்டர் ரவிகுமார் ஆய்வு செய்தார். மொத்தம் 10,351 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 10,174 பேர் தேர்வு எழுதினர். 99 மாணவர்கள், 59 மாணவியர் மற்றும் 17 தனித்தேர்வர்கள் என மொத்தம் 175 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வுப் பணியில் 630 ஆசிரியர்கள், 110 பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். .

News March 3, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச் 2) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக உட்கோட்ட அலுவலரை குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News March 2, 2026

கரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கரூர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக் <<>>செய்து கோவை மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTERபண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 2, 2026

கரூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!