Karur

News December 26, 2024

பள்ளபட்டியில் இறகுபந்துபோட்டி: 80 அணிகள் பங்கேற்பு

image

பள்ளபட்டியில் மாவட்ட அளவிலான இறகுபந்துப் போட்டி நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடந்த போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. குளித்தலையைச் சேர்ந்த ஹரி நவீன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.

News December 26, 2024

கரூரில் சிக்கிய ‘கல்யாண’ ராணி!

image

புஞ்சை காலக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் டிச.12ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் ரேணுகாவிற்கு ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர், கோவையைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக ரமேஷ் அனைத்து மகளிர போலீசில் புகாரளித்தார். இதன்பேரில் ரேணுகாவை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

News December 25, 2024

கரூர்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ திருச்சி – கரூர் இடையே புதிய முன்பதிவில்லா சிறப்பு ரயில் ➤ தந்தையுடன் சென்ற சிறுமி விபத்தில் உயிரிழப்பு ➤ குளித்தலை அருகே செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் ➤ கரூரில் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ➤ அமராவதி தடுப்பணைக்கு 361 கன அடி நீர் வரத்து ➤ கரூரில் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம் ➤ தவெக சார்பில் வேலு நாச்சியாருக்கு நினைவஞ்சலி ➤ இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு ➤

News December 25, 2024

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த கரூர் எம்.பி.

image

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் தனது தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் “அன்பு, கருணை, மன்னிப்பை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்ததினமான இன்று (25/12/2024) அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

News December 25, 2024

கரூர் தவெக சார்பில் வேலு நாச்சியாருக்கு நினைவஞ்சலி

image

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வீரமங்கையின் திருஉருவப்படத்திற்கு கரூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழகம்‌ சார்பாக கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் இன்று மதியழகனால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News December 25, 2024

கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி

image

தமிழ்நாட்டின் மதுவிலக்கு, ஆயத்தீர்வை, மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் வாழும் மக்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் என்றென்றும் ஒற்றை தோழனாய் இருப்பேன் எனவும் கூறினார்.

News December 25, 2024

கரூர்: லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது

image

குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய பாலம், பேருந்து நிலையம், உழவர் சந்தை, நாப்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற செல்வம் (52), ரமேஷ் (50), முகமது இஸ்மாயில் (43), முகமது ரபி (56), ஷாஜகான் (44), செந்தில்குமார் (50), சந்தோஷ் குமார் (33) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

News December 25, 2024

பயணிகள் ரயிலை பொங்கலுக்கு திருச்சி வரை இயக்க கோரிக்கை

image

சேலத்தில் இருந்து கரூருக்கு ராசிபுரம், நாமக்கல், மோகனூர் வழியாக பயணிகள் ரயில் கடந்த 2013 முதல் தினமும் இயக்கப்படுகிறது. சேலம், நாமக்கல், ராசிபுரம், மோகனூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோவில்களுக்கு செல்ல வசதியாக பொங்கல் திருவிழாவையொட்டி இந்தப் பயணிகள் ரயிலை திருச்சி வரை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 25, 2024

கரூர்: தந்தையுடன் சென்ற சிறுமி உயிரிழந்த சோகம்

image

சோமூர் முத்தமிழ்புரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் தனது மகள் 6ம் வகுப்பு படிக்கும் ரித்திகாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு மொசக்கன்னி முடக்கு வழியே சென்றபோது திடீரென ஆடுகள் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி பைக்கிலிருந்து இருவரும் தவறி விழுந்ததில் ரித்திகா சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த கண்ணதாசன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 25, 2024

திருச்சி – கரூர் இடையே புதிய முன்பதிவில்லா சிறப்பு ரயில்

image

திருச்சி – கரூர் இடையே 01.01.2025 முதல் 31.03.2025 வரை மூன்று மாதங்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் (ஞாயிறு தவிர்த்து) புதிய முன்பதிவில்லா சிறப்பு விரைவு வண்டி இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இதனால் தினந்தோறும் கரூர் – திருச்சி பயணம் செல்லும் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!