Karur

News September 20, 2025

கரூரில் இலவசம் அறிவித்தார் கலெக்டர்!

image

கரூரில் டிகிரி முடித்த இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட்., கும்பகோணம் அவர்களின் ஒத்துழைப்புடன் தொழில்பழகுனர் பயிற்சி வாரியம் (தென்மண்டலம்) இணைந்து இணைய தளம் மூலமாக தகுதியான நபர்கள் https://nats.education.gov. in என்ற இணையதளம் மூலமாக 18.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News September 20, 2025

கரூர்: வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்!

image

கரூர் மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <>NSDL<<>>
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க…(SHARE பண்ணுங்க)

News September 20, 2025

கரூர்: 12th போதும்.. எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை!

image

கரூர் மக்களே, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கீழ் எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் 1,121 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்பிக்கலாம். இதை கரூரில் வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 20, 2025

கரூரில் நூதன மோசடி..மக்களே உஷார்!

image

கரூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.”செல்போன் டவர் அமைக்க இடம் தேவை” என்ற பெயரில் சிலர் குறுஞ்செய்தி அனுப்பி ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற சைபர் மோசடிகளில் ஏமாறாதீர்கள். உங்கள் நிலத்தை தரும் முன் சரிபார்க்கவும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே சைபர் குற்றம் உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.SHARE it

News September 20, 2025

கரூர்: மாதம் ரூ.22,000.. கனரா வங்கியில் பயிற்சி!

image

கரூர் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 20, 2025

கரூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

News September 20, 2025

கரூர்: கிராம வங்கியில் வேலை! APPLY NOW!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம், தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள, Office Assistant, உள்ளிட்ட 13,217 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் இரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.21) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்

News September 20, 2025

கரூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கரூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆண்டிசெட்டிபாளையம், கோடந்தூர், வடகரை, காட்டாம்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், எல்லமேடு, எலவனூர், புஞ்சை, நஞ்சை காளக்குறிச்சி, அணைப்புதூர், க.பரமத்தி, நெடுங்கூர், பூலாம்பட்டி, கார்வழி, தென்னிலை, மலைக்கோவிலூர், கனகாபுரி, நொய்யல், அத்திப்பாளையம், வடக்கு நொய்யல், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News September 20, 2025

கரூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், 22.09.2025 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு, எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 20, 2025

கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.09.2025 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!