Karur

News January 5, 2026

கரூர்: குளித்தலைஅருகே அதிரடி கைது!

image

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News January 4, 2026

கரூர்: 18,000 சம்பளத்தில்! ரயில்வே வேலை

image

கரூர் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த<> லிங்க்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

கரூர்: ஆபத்தில் ‘உயிர்காக்கும்’ எண்கள்!

image

கரூர் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: தீயணைப்புத் துறை – 101, ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108, போக்குவரத்து காவலர் -103 , பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ,ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 , சாலை விபத்து அவசர சேவை – 1073 , பேரிடர் கால உதவி – 1077, குழந்தைகள் பாதுகாப்பு -1098, சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930, சைபர் குற்ற உதவி எண் – 1930, மின்சாரத்துறை – 1912 இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 4, 2026

கடவூர்: தந்தையின் நிலத்திற்காக மகன் வெறிச்செயல்!

image

கரூர் மாவட்டம் கடவூர், மோளப்பட்டி அடுத்த ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (60). இவரின் நிலத்தை சரி பாதியாக மகன் பிரித்துக் கொடுத்தும் மேலும் 70 சென்ட் நிலம் வேண்டும் என ஆண்டியப்பனிடம் மகன் கருப்பசாமி கேட்டு தகராறு செய்து 100 தென்னை மரம், 25 தென்னங்கன்றை வெட்டி சேதப்படுத்தி உள்ளார். இதை கேட்ட ஆண்டியப்பன் மனைவியை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாலவிடுதி போலீசார் விசாரணை!

News January 4, 2026

கரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

கரூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு,தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

கரூர் மக்களுக்கு முக்கிய எண்கள்

image

1) மனித உரிமைகள் ஆணையம் -044- 22410377

2) போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

3) போலீஸ் மீது ஊழல் புகார் அளிக்க – 9840983832

4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5) முதியோருக்கான அவசர உதவி -1253

6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7) நுகர்வோர் எண்- 180011400

8) ரத்த வங்கி – 1910

9) கண் வங்கி -1919

10) விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 4, 2026

கரூர்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

கரூர் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே கிளிக் <<>>செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

கரூரில் பெண் உட்பட 6 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் குளித்தலை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, வெங்கமேடு, லாலாபேட்டை, தோகைமலை ஆகிய காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற பாப்பாத்தி (64), ஆசைத்தம்பி (57), ராமசாமி (60), செந்தில்குமார் (44), கிருஷ்ணமூர்த்தி (35), ராசம்மாள் (60) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 144 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

News January 4, 2026

கரூர்: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில்<> mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 4, 2026

கரூரில் இரண்டாகப் பிரிப்பு: கலெக்டர் அறிவிப்பு!

image

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!