India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சம்மேளன முடிவின்படி கரூர் மண்டலத்தின் முன்பு சம்மேளன நிர்வாகக்குழு உறுப்பினர் அரவக்குறிச்சி செந்தில்குமார் தலைமையில் திராவிட மாடல் அரசின் செயலற்ற தன்மையை கண்டித்து வாயிற்கூட்டம் நேற்று நடந்தது. 11 மணிக்கு தொடங்கிய இந்த வாயிற்கூட்டத்திற்கு சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் மோகன் குமார் வாழ்த்துரை வழங்கினார். கோரிக்கைகளை விளக்கி மத்திய சங்க பொறுப்பாளர்களும், கிளைப் பொறுப்பாளர்களும் உரையாற்றினர்.

1. குளித்தலை அருகே 2.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.
2. ஒன்றியக் குழு தலைவர், உறுப்பினர்கள் சாலை மறியல்.
3.பால் கொள்முதல் செய்வதை பார்வையிட்ட கலெக்டர்.
4. அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.
5. மகளிர் காவல் ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
6. நில அளவை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
7. கரூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம்.
8. கரூர்: 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர் தற்செயல் விடுவிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை பெற்று தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் 8. அம்ச கோரிக்கையை முன்வைத்தனர். இதில் வரவேற்பு மோகன்ராஜ் மாவட்ட துணை செயலாளர் முன்னிலை குணசுந்தரி இணை செயலாளர் கோரிக்கை விளக்கவுரை தங்கவேலு மா செ சிறப்பித்தனர்.

கரூர் வெண்ணைமலையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (20/12/2024 )நடக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கவுள்ளது. முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு 94990-55912 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கரூரில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (21.12.24) கரூர் பழைய அரசு மருத்துவமனையில் நடக்க இருக்கிறது. ஓட்டுநருக்கான அடிப்படைத் தகுதிகள் (PILOT): 10ஆம் வகுப்பில் தேர்ச்சி, 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும் .இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு.7397724819 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்: வழக்கறிஞரும், அதிமுக பிரமுகருமான பச்சையப்பன் மற்றும் திமுக பிரமுகரும், கரூர் மாநகராட்சி உறுப்பினருமான பாண்டியன் ஆகியோரின் சகோதரர் எம்.தனபால் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் வெங்கமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவிற்கு அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1.தொடர்புத்துறை அமைச்சரை சந்தித்து கரூர் எம்பி மனு
2.கரூரில் மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு சிறை
3.கரூரில் கொடூர கொலை: 2 பேரிடம் விசாரணை
4.அமராவதி தடுப்பணைக்கு 1079 கன அடி நீர் வருகை
5.IUM கட்சி மாநில நிர்வாகி துணை முதல்வரிடம் வாழ்த்து

கரூர் அஞ்சல் பிரிப்பு அலுவலகத்தை விரைவு அஞ்சல் பிரிப்பு மையமாக (Intra Circle Hub- ICH ) தரம் உயர்த்தித் தரக்கோரி ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சர் திரு.ஜோதிராதித்ய சிந்தியா அவர்களை இன்று (18.12.2024) சந்தித்து கடிதம் கரூர் எம்பி ஜோதிமணி வழங்கினார். மேலும் கரூர் மாவட்டம் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க ஜவுளி மையமாகவும், இந்தியாவின் நான்காவது பெரிய ஏற்றுமதி நகரமாகவும் உள்ளது என்று கூறினார்.

குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப்போட்டி 28.12.2024 விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் எழுத்துத்தேர்வு 21.12.2024 சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கரூரில் நடைபெறும் மேலும் விபரங்களுக்கு 9788858701 தொடர்பு கொள்ளவும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சியில் குடிநீர், சாலை வசதி போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளை சரி செய்ய கோரியும் உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உடனடியாக செயல் அலுவலர் நியமனம் செய்யவில்லை எனில் மக்களை திரட்டி பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.