India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டம் நாளை (30.12.2024) காலை 10 மணிக்கு தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற இருக்கின்றது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் கலந்து கொண்டு பயன்பெறும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்க உள்ளார்கள்.

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் மற்றும் பெரிய பாலம் பகுதியில் அரசு அனுமதி இன்றி ‘யார் அந்த சார்?’ என்ற வாசகங்கள் எழுதிய போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. அதனையடுத்து போஸ்டரை ஒட்டியதாக மணத்தட்டையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் மீது குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக.,சார்பில் டிச 27இல் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமான நிலையில், ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நாளை (டிச.30) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கட்சியினர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ பாக்சிங் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி கரூரில் நடந்தது. கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைப்பாளர் விக்ரம் மனோகர் தலைமை வகித்தார். கரூர், அரவக்குறிச்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.

கரூரில் அறிஞர் அண்ணா நெடுந்தூரம் ஓட்டப் பந்தயம் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் நபர்கள் 04.01.25 அன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், அலுவலகத்திலோ (அல்லது) 7401703493 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார்.

புன்னம் சத்திரம் அருகேயுள்ள மூலிமங்கலம் குருராகவேந்திர நகரைச் சேர்ந்த வசந்தி, இவரது வீட்டிற்குள் 5 அடி நீள நாகப்பாம்பு புகுந்துள்ளது. இதைக்கண்ட வசந்தி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து வீட்டுக்குள் இருந்த பாம்பை விரட்டியும், வெளியே வரவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து வீரர்கள் நேற்று வனப்பகுதியில் விட்டனர்.

கரூர் மாவட்டத்தில் புகலூரில் டிஎன்பிஎல் ஆலை செயல்பட்டு வருகிறது. கிரேட் பிளேஸ் டு ஒர்க் என்ற உலகளாவிய ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பணியிட கலச்சாரம், பணியாளர்களின் கருத்து மற்றும் நிறுவன நடைமுறைகள் போன்ற அளவுகோல்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் மேன்மையான நிறுவனம் என்ற சான்றிதழை வழங்கியது. டிஎன்பிஎல் ஆலை 96% மதிப்பெண்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

1.முகமூடி கொள்ளையர்கள் சிசிடிவி காட்சி வெளியீடு
2.கரூர் மாவட்டத்தில் விஜயகாந்த் நினைவஞ்சலி நடைபெற்றது.
3.பிடிஓ சஸ்பெண்ட்: கரூர் கலெக்டர் உத்தரவு
4.கரூர்: ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர்
5.கரூரில் புதிய இணைப்பு சாலை: அமைச்சர் திறப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு விதிகளை பின்பற்றாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அலுவலக பணிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜேந்திரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கரூர் ஆட்சியர் தங்கவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.