India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மண்மங்கலம் ஒன்றியம் ஆண்டாங்கோவில், ஆத்தூர் பிரிவு சுந்தரம் நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மனைவி கனிமதி (31) இவர் கடந்த 3 வருடங்களாக வயிற்று வலி மற்றும் காது வலியால் அவதிப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு குணமாகவில்லை என அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை பார்த்து கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் சின்னதாராபுரம் அருகே உள்ள நல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் திவாகரன் மகன் தமிழ்(7). இச்சிறுவன் நேற்று(ஜூன் 7) வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். விரைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி ஆணையர் சுதா, ஊரக வளர்ச்சி முகாமில் திட்ட அலுவலர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி ஆணையர் சுதா, ஊரக வளர்ச்சி முகாமில் திட்ட அலுவலர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர் பகுதியில் 6 செ.மீட்டரும், கடவூர் பகுதியில் 4 செ.மீட்டரும், குளித்தலை பகுதியில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப். 19-ம்தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் 54 பேர் போட்டியிட்டு முக்கிய வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் , அதிமுக சார்பில் தங்கவேலும் , பாஜக சார்பில் செந்தில்நாதனும் , நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையாவும் களம் கண்டனர். மேலும் தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் தவிர மற்ற 52 பேரும் வைப்புத்தொகையை இழந்தனர்.
கரூர் மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி- 5,31,829 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் தங்கவேல்- 3,66,209 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் செந்தில்நாதன்- 1,01,517 வாக்குகள்
*நாதக வேட்பாளர் கருப்பையா- 86,962 வாக்குகள்
கரூர் பிரதட்சணம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் கடந்த ஒரு ஆண்டாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை இருந்தவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டவுன் போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
கரூரில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து ஜோதிமணிக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலரும் தங்கவேல் மற்றும் மாவட்ட எஸ்பி பிரபாகரன் தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்கள். உடன் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி மாநகராட்சி மேயர் கவிதா கணேஷ் துணை, மேயர் தாரணி சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.