Karur

News June 13, 2024

கரூர்: மனைவியிடம் செல்போன் பேசியதற்கு கத்தி குத்து

image

கரூர் கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவர் லாலாபேட்டை மருதாண்டா வாய்க்கால் கரையில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் தனது மனைவியிடம் செல்போன் மூலம் தவறாக பேசியதை மனதில் வைத்துக் கொண்டு கத்தியால் ராஜலிங்கம் குத்தியுள்ளார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News June 12, 2024

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 21ல் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் வேலை தேடுவோர் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள www. tnprivatejobs. tn. gov. in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04324 223555 மற்றும் 97891 23085 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு  ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

சாலையில் தடுமாறி விழுந்த இளைஞர் படுகாயம்

image

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுக்கா மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் மணிகண்டன் (21). இவர் தனது பைக்கில் குளித்தலை அருகே போத்தராவுத்தன்பட்டி சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து மணிகண்டன் அத்தை அழகம்மாள் புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

News June 10, 2024

ஆதார் அட்டை முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ

image

கடவூர் ஒன்றியத்தில் உள்ள தரகம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாமை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுதகர் , கவுன்சிலர் பிரபாகர், ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கலந்து கொண்டனர்.

News June 10, 2024

கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் 261 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தனித்துறை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

கரூர்: மஞ்சப்பை வழங்கு நிகழ்ச்சி பாராட்டிய ஆட்சியர்

image

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் மணவாடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக பள்ளியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் சென்று ஆய்வு செய்து, மஞ்சப்பை வழங்குவதை பாராட்டினார்.

News June 10, 2024

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது – ரூ.34285 பறிமுதல்

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன்பட்டி கிழக்கு தெரு தண்ணீர் டேங்க் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட முருகேசன் (48), சக்திவேல் (57), கலியமூர்த்தி (45) சக்திவேல் (32) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 2 சீட்டு கட்டுகள், ரூ.34285 பறிமுதல் செய்தனர்.

News June 10, 2024

கருரில் மல்லிகை பூ விலை உயர்வு

image

கரூர் மாரியம்மன் பூச் சந்தையில் ஏலம் விடுவது வழக்கம் கடந்த வாரம் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ கிலோ ரூ.400 வரையிலும், கிலோ ரூ.30-க்கு ஏலம் போன முல்லை பூ கிலோ ரூ.300-க்கும், கிலோ ரூ.10-க்கு விற்ற செண்டு மல்லி பூ ரூ. 100-க்கும் விற்பனையானது. இதில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் கடந்த 2 நாள்களாகவே பூக்களின் நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால்தான் முல்லை, செண்டு மல்லி பூக்களின் விலை உயர்ந்தது

News June 9, 2024

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News June 9, 2024

கரூர்: நடத்துநரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

image

குளித்தலை அருகே முசிறி பணிமனையில் அரசுப் பேருந்து நடத்துநராக அசோக்குமார் பணிபுரிந்து வருகின்றார். வழக்கம்போல் கடந்த 2ஆம் தேதி அரசுப் பேருந்தில் குளித்தலையிலிருந்து கருங்களாப்பள்ளி சென்றுள்ளனர். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகிய இருவரும் மது போதையில் பஸ்ஸை மறித்து நடத்துனரை கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்துள்ளனர்.

error: Content is protected !!