India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், மதுரை உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் பகுதிகளுக்காக ரூ.800 கோடியில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(ஜூன்.22) சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனால், கரூர் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை ஒன்றியங்களின் 64 குடியிருப்புகளுக்கும் இந்த குடிநீர் திட்டத்தால் மொத்தம் 4.85 லட்சம் மக்கள் பயனடைவார்கள் எனக் கூறியுள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்டில் கோவை சாலை, வெங்கடேஷ்வரா சாலையில் இருந்த, 29 கடைகள் இடிக்கப்பட்டன. தற்போது, அதே இடத்தில் கடைகளை கட்டி, பழைய உரிமம் தாரர்களுக்கு விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 29 கடைகளின் பழைய உரிமம்தாரர்கள் செலுத்த வேண்டிய நிலுவை வாடகை குறித்த விபரங்களை பிளக்ஸ் பேனரில் கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகே வைத்து மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருநங்கைகள், திரு நம்பிகளுக்கு அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பாக நடைபெற்றது. இதில், 36 திருநங்கைகள் வீட்டுமனை பட்டா மற்றும் சுய தொழிலுக்கான கடன் உதவி, வீடுகளே பராமரிக்க உதவி ஆகியவை வழங்கினார்.
இந்திய விமானப்படையின் அக்னிவீா் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு தோ்வுக்கு ஜூலை 8-ஆம்தேதி முதல் 28-ஆம்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீா் வாயு தோ்வுக்கு 2004 ஜூலை 3-ஆம்தேதி முதல் 2008 ஜன. 3-ஆம்தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களுக்கு, கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் அறிந்து கொள்ளலாம் என கரூா் ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இந்திய விமானப்படையின் அக்னிவீா் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு தோ்வுக்கு ஜூலை 8-ஆம்தேதி முதல் 28-ஆம்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீா் வாயு தோ்வுக்கு 2004 ஜூலை 3-ஆம்தேதி முதல் 2008 ஜன. 3-ஆம்தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களுக்கு, கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் அறிந்து கொள்ளலாம் என கரூா் ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
கடவூர் வட்டம் வரவனை கிராம அலுவலர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று (ஜூன்.19) நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது மக்களின் தேவையை சேவைகளாக உங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லும் திட்டத்தின் மூலம் பொது சேவையை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
கரூர் ஆலமரத்தெருவைச் சேர்ந்தவர் அகிலேஷ் (12) இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சரளமாக 1,330 திருக்குறளையும் ஒப்பிக்கிறார் . குறள் எண் கூறினால் அந்த குறளை கூறி அதற்கான விளக்கமும் கூறுகிறார். இந்த மாணவருக்கு கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் பாராட்டு விழா நேற்று பேரவையின் நிறுவனர் மேலைபழநியப்பன் மாணவரின் திறனை ஆராய்ந்து அவருக்கு பரிசுகள் வழங்கினார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கரூரில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (ஜூன்.21) வெண்ணைமலையில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. தங்களுடைய கயவிவரகுறிப்பு உரியகல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம்.விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.