Karur

News January 12, 2026

கரூர் : 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வே வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 12, 2026

கரூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

கரூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE)

News January 12, 2026

கரூர்: மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று விடுமுறை என்பதால் மறவாபாளையத்தில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது பொன்னுச்சாமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்து விழுந்தார்.
GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News January 12, 2026

கரூர்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே<> கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 12, 2026

கரூர்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

கரூர் மக்களே வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்ற தங்களது வரி தொடர்பான சேவைகளை இனி வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெறலாம். இதற்கு vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் சேவையை பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு 98849- 24299 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். (இத்தகவல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 12, 2026

கரூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் புகலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (44). இவர் தனது மனைவி சுகன்யா மற்றும் சகோதரி வைதேகி ஆகியோருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது இவர்களது வாகனத்திற்கு எதிராக குணா என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இவ்விபத்தில் சுப்பிரமணி உட்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 12, 2026

கரூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் புகலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (44). இவர் தனது மனைவி சுகன்யா மற்றும் சகோதரி வைதேகி ஆகியோருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது இவர்களது வாகனத்திற்கு எதிராக குணா என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இவ்விபத்தில் சுப்பிரமணி உட்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 12, 2026

கரூர்: ARMY-ல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு BE., B.tech முடித்தவர்கள் 05.02.2026-க்குள் லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இப்பணிக்கு தேர்வு கிடையாது. நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். (SHARE)

News January 12, 2026

வாங்கல் அருகே விபத்து

image

கரூர், வாங்கல் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் நேற்று தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக் நிலைதடுமாறி அருகிலிருந்த வீட்டின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

கரூரில் அருகே விபத்து: இளைஞர் பலி

image

கரூர் அருகே பைக்கில் சென்ற பிரகாஷ் (26) என்பவர், முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!