Karur

News January 29, 2026

கரூரில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

கரூரில் நாளை (30.1.2026) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்படும். இதனால் கரூர் ஜவுளி பூங்கா, வையப்பம்பட்டி, ஆறு ரோடு, ஆட்டையாம்பரப்பு, எஸ்.ஜி.புதூர், கருப்பம்பாளையம், மணல்மேடு, தும்பிவாடி, காக்காவாடி, பள்ளப்பாளையம், குன்னம்பட்டி மற்றும் தாதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News January 29, 2026

கரூர்: இனி பேங்க் போக தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

News January 29, 2026

கரூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<> CLICK HERE.<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 29, 2026

கரூர் அருகே சோகம்: ஒருவர் பலி

image

கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(57), நேற்று அமராவதி ஆற்றுப் படுகை அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது பாம்பு கடித்தது. உடனடியாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இது குறித்து அவரது மனைவி தேவி அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 29, 2026

JOB ALERT கரூர்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பிப்.2 – (Sci.gov.in),
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை பிப்.10- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை பிப்.3 – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை பிப்.8- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை பிப்.10- (locl.com)
(வேலை தேடும் யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க)

News January 29, 2026

கரூர்: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

image

கரூர் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <>Aadhaar App <<>>மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

அய்யர்மலை: திருமண வீட்டில் ஜோடி கைது!

image

கரூர் மாவட்டம் அய்யர்மலை திருமண மண்டபத்தில் மொய் பணத்தைத் திருட முயன்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் பாண்டியம்மாள் ஆகிய இருவரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். இது குறித்து ராமசாமி அளித்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் இன்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 29, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை 30.1.26 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!