Kanyakumari

News December 31, 2024

குமரியில் முதல்வரின் இன்றைய நிகழ்ச்சி

image

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு புறப்படுதல்; காலை 9.30 மணி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருக்குறள் ஓவியர் கண்காட்சி திறந்து வைத்து சிறப்பு மலர் வெளியிடுதல்; மேலும் திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல். காலை 10.30 மணிக்கு குமரியில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்படுதல்.

News December 30, 2024

தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கிய முதல்வர்

image

குமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி, கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை வளாகத்தில் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். அருகில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் இருந்தனர்.

News December 30, 2024

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

இன்று (டிச.30) மாலை 4 மணியளவில் குமரி காந்தி மண்டபம் முன்பு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கன்னியாகுமரி தொகுதியை தனி தொகுதியாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News December 30, 2024

குமரியில் முதலமைச்சரின் இன்றைய நிகழ்வுகள்

image

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.30) மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு கண்ணாடி பாலம் மற்றும் பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருள் அங்காடி ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். 6.30 மணிக்கு திருவள்ளுவர் சிலை படகு குழாமுக்கு சென்று சீரொளி காட்சியினை கண்டுகளிக்கிறார். திருக்குறள் நெருப்பு 25 தகைமையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குகிறார்.

News December 30, 2024

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

இன்று (டிச.30) காலை 10 மணி குமரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காலை 10.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News December 30, 2024

கன்னியாகுமரிக்கு புதிய எஸ்.பி. நியமனம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த சுந்தரவதனம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த ஸ்டாலின் தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News December 30, 2024

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: முதல்வர் அழைப்பு

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தாண்டு 2025-இல் #StatueOfWisdom எனப் பெயர் பெற்றுத் திகழும் வள்ளுவர் சிலை அதனை அமைத்த கலைஞர் புகழ் போல உயர்ந்து நிற்கிறது; ஆழிப்பேரலையை எதிர்கொண்டு வெள்ளிவிழா காணும் வள்ளுவரின் பேரறிவு சிலை போல தமிழ்நாடும் தடைகளைத் தகர்த்து முன்னேறும்; பேரறிவுச் சிலையைக் கொண்டாட அனைவரும் குமரிமுனை வருக” என தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

குமரியில் தயார் நிலையில் கண்ணாடிக் கூண்டு பாலம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடிக் கூண்டு பாலம் நாளை திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு திறப்பு விழா காண இருக்கிறது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற பணிகள் முடிவு பெற்று கண்ணாடிக் கூண்டு பாலத்தின் பிரத்யேக படம் வெளியாகி உள்ளது.

News December 29, 2024

முதல்வர் குமரி வருகை; நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் குமரி முனையில் நடைபெறும் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை (டிச. 30) வரவுள்ளார். மகாதானபுரம் ரவுண்டானாவில் வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள திமுக இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் அழைப்பு வெளியிட்டுள்ளார்.

News December 29, 2024

ஆட்டோ டிரைவர் கொலை: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

image

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் மோகன். ஆட்டோ டிரைவரான இவரை ஷாஜி கத்தியால் குத்தி கொலை செய்தார். ஷாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது, மோகனுக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், தற்போது அந்தப் பெண் ஷாஜியுடன் பழகி வந்துள்ளார். இதனால் மோகன் அந்தப் பெண்ணுக்கு கொடுத்த பணத்தை கேட்டதால், மோகனை ஷாஜி கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!