India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனை அடுத்து ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் நாளை(டிச.3) முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக நாளை முதல் வழங்கப்பட இருக்கிறது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி விவேகானந்தர் பாறைக்கு அருகில் வள்ளுவருக்கு சிலை அமைக்க 1979-ல் எம்ஜிஆர் ஆட்சியில் அடிக்கல் நாட்டிய வரலாறை திமுக மறைக்கிறது. குமரி கண்ணாடி பாலத்தில் வள்ளுவரை தரிசிக்க கட்டணம் வசூலிக்கும் எண்ணம் வியாபாரத்தனம் மட்டுமல்ல, திருவள்ளுவரை இழிவுபடுத்தும் செயல், விவேகானந்தரை நேசிக்கும் மக்களை அவமதிக்கும் செயல்” என்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மன்னார் வளைகுடா வழியாக வடக்கில் இருந்து பலத்த சூறைக்காற்று கடல் பகுதியில் வரும் 5ம் தேதி வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கன்னியாகுமரி தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#இன்று(ஜன.,2) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலைகளுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழகத் தொட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு 33வது நாளாக உண்ணாவிரத போராட்டம்.#காலை 10:30 மணிக்கு உடை அடி ஆதிதிராவிடர் நல பள்ளியில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக காத்திருப்பு போராட்டம்.
குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள சுந்தர வதனம் சென்னை கியூ பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 6ம் தேதி(திங்கட்கிழமை) கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை புதிய கண்காணிப்பாளராக பொறுப்பேற்க இருக்கிறார். SHARE IT.
குமரி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ரயில் மோதி மொத்தம் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் 11 பேர் தற்கொலை செய்தவர்கள். மீதமுள்ள 35 பேர் கவனக்குறைவால் ரயில் மோதி இறந்தவர்கள் ஆவர். இது தவிர 2 பேர் ரயிலில் பயணம் செய்யும்போது உடல்நலக்குறைவால் இறந்தவர்களும் உண்டு. இதன்மூலம் கடந்த ஆண்டு மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என நேற்று நாகர்கோவில் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு 759 வழக்குகள் பதிவாகியுள்ளது. மார்த்தாண்டத்தில் 573 வழக்குகள், களியக்காவிளையில் 416 வழக்குகள், ஆறுகாணியில் 367 வழக்குகள், நித்திர விளையில் 352 வழக்குகள், திருவட்டாரில் 460 வழக்குகள், புதுக்கடையில் 403 வழக்குகள், கருங்கல்லில் 324 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்த்தாண்ட பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் நடந்து சென்ற போது பைசல் கான் என்பவர் மாணவியை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மாணவி தாய் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். கைதான பைசல் கானுக்கு உதவியாக இருந்த மணலிக்கரை பகுதியை சேர்ந்த ரத்தீஷ் என்பவரை மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் இன்று கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எந்தவித அனுமதியும் பெறாமல் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிக் ராஜ் உட்பட 70 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புத்தாண்டு பிறந்தது, புதியவழி திறந்ததுவெற்றிப்பாதை மலருது, எட்டு திக்கும் பரவுதுபட்ட துன்பம் மறையுது, மகிழ்ச்சி மலரப்போகுதுஉற்ற நட்பு உருவாகும், அது ஏற்றம் காணும் வழியாகும், துன்பம் மறைந்து துறவரம் போகும்இன்பம்மலர்ந்து இனியவை நடக்கும்ஏற்ற நிலை அடைந்திடுவோம், இழி நிலைகளை விரட்டிடுவோம்கொடுத்து சிவந்த கரத்தின் வழி, புரட்சித்தாயின் புனிதவழிபுரட்சித்தமிழரின் உழைப்பின் வழி வெற்றிவாகை சூடிடுவோம்.
Sorry, no posts matched your criteria.