India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 12.86 மற்றும் 12.96 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 41.63 அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 56.6 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 17.4 அடி நீரும், 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறில் 50.36 அடி நீரும் 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.6 அடி நீரும் இருப்பு உள்ளது.
“தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இனி தமிழ்நாட்டில் இருப்பதில் நியாயம் இல்லை..#Get out Ravi” என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சுதன் மணி இதனை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தக்கலை அருகே பறைக்கோடு கோவில்விளை பகுதியை சேர்ந்தவர் அமுதலதா(55), இவரது மகன் மெல்பின் ராஜ்(24) இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு கட்டியது, மகள் திருமண செலவு என ரூ.20 லட்சம் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதை கட்ட முடியாததால், நேற்று(ஜன.6) விஷம் குடித்த இருவரும் இன்று அதிகாலை மருத்துவமனை கொண்டுபோகும் வழியில் உயிரிழந்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#குமரியில் இன்று(ஜனவரி 7) காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் மறியல் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விலை நிலையற்ற நிலையில் ஏறி இறங்கி வருகிறது. கடந்த 31ஆம் தேதி 100 கிலோ ரப்பர் 19 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி 19,200 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில் இன்று ரப்பர் விலை 19,000 ரூபாயாக குறைந்துள்ளது. ரப்பர் விலை நிலையற்ற நிலையில் இருந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று (ஜன. 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்படும்; கந்துவட்டி போதை சம்பந்தப்பட்ட புகார்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்; மேலும் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வரும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
குமரியில் உள்ள அரசு பழத்தோட்டத்தில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரே ஆண்டில் 1 லட்சத்து 115 பேர் இந்த பூங்காவை பார்வையிட்டுள்ளனர். இதில் 65,015 பெரியவர்கள், 35100 பேர் சிறியவர்கள் ஆவர்.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா இன்று (06.01.2025) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்களர்கள் 788581 பேர், பெண் வாக்காளர்கள் 795637 பேர், மூன்றாம் பாலினத்தோர் 144 என மொத்தம் 1584362 வாக்காளர்கள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. SHARE பண்ணுங்க
வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாகர்கோவில், பத்மநாதபுரம், இரணியல், குழித்துறை, பூதப்பாண்டி, ஆகிய நீதிமன்றங்களில் 2500 வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் செங்கல்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் 43 நாட்டுப் படகுகளுக்கு போலீஸ் இன்சூரன்ஸ் தயாரித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலியாக இன்சூரன்ஸ் தயார் செய்தவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் காப்பீடு நிறுவனம் மூலம் குமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.