India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி. யாக ஸ்டாலின் பதவி பொறுப்பேற்ற பின்னர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி மாவட்டத்தில் ஏற்கனவே புகார் செய்து வழக்கு பதிவு செய்யாமல் இருந்த, புகார் மனுக்களை தூசி தட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். இதனால் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
“குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை (ஜன.,11) முதல் வரும் 20ம் தேதி வரை பத்து நாட்கள் விடுப்பு இல்லாமல் அனைவரும் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும்; அவசர கால, அத்தியாவசிய விடுப்பு தவிர, பிற விடுப்புகளை தவிர்க்க வேண்டும்” என்று போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை கண்காணிக்க வேண்டும் என்றும், இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “என்றும் மனதில் நிற்கும் மிக சிறந்த பாடல்களை பாடிய P. ஜெயச்சந்திரன் மறைவு, சோகம் தரும் செய்தி; அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்; அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், தோவாளை கிருஷ்ணன் கோவில், திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவில், சிறமடம் சிறை மீட்ட பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.2.மாலை 5 மணி குளச்சல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சிபிஎம்எல் லிபரேஷன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது
குமரி, பூசப்பட்டு பகுதியில் உணவு கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்களை பறிமுதல் 6 செய்து, 9 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைதான 9 பேரும் அசாம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேர்க்கிளம்பி சசிராஜின் பெட்ரோல் பங்கில் மேலாளராக செம்பருத்திவிளை அனீஷ், பணியாளர்களாக அனீஷின் தம்பி அஸ்வின், குட்டைக்குழி ஆகாஷ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பெட்ரோல் வரவு செல்வுகணக்குகளில் ரூ.1 கோடி 9 லட்சம் அளவில் மோசடி செய்ததை அறிந்த சசிராஜ், அவர்களிடம் பணத்தைகேட்டபோது கொலைமிரட்டல் விடுத்ததையடுத்து குமரி எஸ்.பியிடம் புகார் அளித்தார். இதையடுத்து அனீஷ், ஆகாஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 12.53மற்றும் 12.63அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 41. 14அடி நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 55.9அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 17.அடி நீரும், 54.12அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறில் 50.03அடி நீரும் 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.6 அடி நீரும் இருப்பு உள்ளது.
குமரியில் இன்று திடீரென்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. கடலில் ராட்சதலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின10அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதை தொடர்ந்து கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இன்று காலை 9 மணிக்கு அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க கேட்டு அரசு ரப்பர் தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு 39 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம். காலை 11 மணிக்கு ஆரல்வாய்மொழி பூங்கா முன்பு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் காத்திருப்பு போராட்டம்.மாலை 5.30 மணிக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரி CPS ஒழிப்பு இயக்கம் நாகர்கோவிலில் பேரணி.
Sorry, no posts matched your criteria.