India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் நித்திரவிளை பகுதியில் சைஜு, ராஜேஷ் குளச்சல் பகுதியில் சிபு கோட்டார் பகுதியில் நவீன் ராஜ், நேசமணி நகர் பகுதியில் மணிகண்டன் மற்றும் முகேஷ், பூதப்பாண்டி பகுதியில் ஜீனோ மற்றும் வர்க்கீஸ், கன்னியாகுமரி பகுதியில் அந்தோணி ஆகியோர் பொது இடத்தில் மது அருந்தியதாக அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
நடிகை காயத்ரி ரகுராம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று(ஜன.12) குமரி மாவட்டம் வந்தார். அவர் அய்யா வழிபாட்டின் தலைமையிடமாக திகழும் சாமி தோப்புக்கு சென்றார் அங்கு பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். இதில் சினிமா தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார், பேராசிரியர் தர்ம ரஜினி உள்பட பலர் பங்கேற்றனர்.
குமரியில் நடைபெறும் பொங்கல் விழா உட்பட பல்வேறு விழாக்களில் நேற்று(ஜன.12) இரவு கலந்து கொள்ள வந்த திரைப்பட நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார்க்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், ஜவான் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
காலை 9 மணி; கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி ரப்பர் கழக தொழிற்சாலை முன்புதோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 42 வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது. காலை 11 மணி; கீரிப்பாறை காவல் நிலையம் முன்பு காவல்துறை தங்கத்துரை என்பவர் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி நாராயணனை நேற்று (ஜனவரி 12) குமரி எம்.பி விஜய் வசந்த் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன், திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
குமரியில் சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திரிவேணி சங்கமம் பகுதியில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி இன்று (ஜன.13) நடைபெறுகிறது. அறக்கட்டளை தலைவர் ராஜகோபாலன் தலைமையில் நடைபெறும், இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
குமரி, குருவியோடு பகுதியை சேர்ந்த சஜின்மோன் – ராஜிகா தம்பதியரின் குழந்தை சாய் ரியாஸ். தற்போது 2 வயது 8 மாதமான இக்குழந்தை 3 மாதங்களுக்கு முன் 50 மீட்டர் தூரத்தை 18 விநாடிகளில் ஓடி வேர்ல்டு வைடு ரெக்கார்டு(World Wide Book Of Record) புக்கிலும், 100 மீட்டர் தூரத்தை 40 விநாடிகளில் ஓடி இந்திய சாதனை புத்தகத்திலும்(India Book Of Records) இடம் பிடித்துள்ளார். சாயை பலரும் பாராட்டி வருகின்றனர்.
குமரி ஆட்சியர் அழகுமீனா இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,“குமரி மாவட்டத்தில் அனைத்து அரசு துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜன. 22, 23 ஆம் தேதிகளில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார
(ஜன12)
தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகள் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களைச் சிறந்த சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்கிய வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று.
பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை, உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர். ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்தவர்.
கன்னியாகுமரி மாவட்ட SP-யாக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், மாவட்டத்தில் சீருடை அணிந்து செல்லும் காவலர்கள் ‘HELMET’ அணியாமல் சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, நடவடிக்கை குறித்த விவரங்களை தனக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.