India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் சுகாதார பணியாளர்களுக்கு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு இன்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குடோனில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனத்தில் ( OICL ) 500 அசிஸ்டண்ட் காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கபடுகிறது. டிகிரி முடித்தவர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 க்குள் <

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாநில திட்டக்குழு ஆணையத்தால் கடந்த 1ம் தேதி நடத்தப்பட்ட கருத்தரங்கில் பூதப்பாண்டி அரசு மருத்துவனையில் வளமிகு வட்டார வளர்ச்சித்திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு சிறந்த நடைமுறைக்கான விருது (Best Practices Award) வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

குமரி அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் தான் இந்த “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM). இதில் சந்தாதாரர் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000-யை குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், ஓட்டுநர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்கள் <

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 5) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.43 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.12 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 76 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.85 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 360 கன அடி, பெருஞ்சாணிக்கு 143 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

கன்னியாகுமரி: தக்கலைப் பகுதில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மூலச்சல் பகுதியைச் சார்ந்த வர்கீஸ்(55) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். இவர் கிறிஸ்தவசபையில் வேதாகம வகுப்பிற்கு வந்த 16 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்போரில், தக்கலை போலீசார் மதபோதகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு புதிய மின் நிலையம், பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம், தென் தாமரைக்குளம், அஞ்சு கிராமம், கொற்றிக்கோடு, பளுகல், கடையால மூடு, மண்டைக்காடு ஆகிய 7 காவல் நிலையங்கள் தற்போது உதவி ஆய்வாளர் காவல் நிலையங்களாக இருந்து வருகிறது. இந்த 7 காவல் நிலையங்களும் ஆய்வாளர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் பகவதியப்பன். இவரது மகள் மனிஷா (23). தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்தார். இவர் நேற்று தந்தையிடம் ஆண்ட்ராய்டு போன் வாங்கி தரும்படி கேட்டார். அதற்கு கோவில் திருவிழா முடிந்த பின் வாங்கித் தருவதாக தந்தை கூறிய நிலையில் நேற்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள பொட்டல்குளம் லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (33). இவர் இன்று மதியம் லெட்சுமிபுரத்தில் மர்ம நபர்களால் நடுரோட்டில் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.