Kanyakumari

News January 22, 2025

புத்தளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் போராட்டம் வெற்றி

image

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களின் மாத சம்பளத்தில் கையாடல் நடப்பதாக புத்தளம் பேரூராட்சி பத்தாவது வார்டு பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர் ஜெகநாதன் தலைமையில் நேற்று (ஜன. 21) உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்த பணியை ரத்து செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்

image

அஇஅதிமுக கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் மேல்புறம் ஒன்றியம் பாகோடு,களியக்காவிளை உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த மாற்று கட்சியினர் சுமார் 200 பேர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகி கிளாடிஸ்லில்லி ஏற்பாட்டில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜாண்தங்கம் மற்றும் கழக அமைப்பு செயலாளர்சின்னத்துரை முன்னிலையில் நேற்று(ஜன.21) தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

News January 22, 2025

சைதன்யானந்த ஜி மஹராஜை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர்

image

குமரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி நிர்வாக காரணங்களுக்காக கிழக்கு, மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். இதில் கிழக்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட கோபகுமார் இன்று (ஜன. 21) வெள்ளிமலை ஹிந்துதர்ம வித்தியாபீடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்த ஜி மஹராஜை சந்தித்து ஆசி பெற்றார்.

News January 22, 2025

குமரி: வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலந்தாய்வு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.

News January 21, 2025

குடியரசு தின பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

image

குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நிகழ்ச்சிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. குமரி எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக எஸ்பி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

News January 21, 2025

குமரியில் மாற்றுத் திறனாளிகளின் சிறப்பு குறைதீர் கூட்டம்

image

நாகர்கோவில் கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் 24.01.2025 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்டரங்கம், நாகர்கோவிலில் வைத்து நடைபெற உள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளுடன் அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஆட்சியர் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

News January 21, 2025

நாகர்கோவிலில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சுங்கான் கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் குமரி திருவிழா-2025 மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஜன.24 அன்று நடைபெற உள்ளது. சுமார் 50 தொழில் நிறுவனங்கள் மற்றும் 4,500 வேலை வாய்ப்புகளுடன் நடைபெற உள்ள இந்த முகாமிற்கு நேரடியாகவோ, 91766 99228 என்ற எண்ணிலோ kumarifest.org என்ற இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம். SHARE IT.

News January 21, 2025

குமரியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு!

image

அகில இந்திய சித்த மருத்துவ கழகம் சார்பில், இம்மாதம் 25ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் மாபெரும் பாரம்பரிய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்கிறார். இதில், சிறந்த சித்த மருத்துவர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விருதுகளும் வழங்கப்படுகிறது.

News January 21, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.21) காலை 10.30 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம். #அழகிய பாண்டிபுரம், கல்குளம், கருங்கல், திருவட்டார், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலும் மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்.#மாலை 5 மணிக்கு மேல்புறம் சந்திப்பில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.

News January 20, 2025

காதலிக்கு தூக்கு தண்டனை; போலீஸ் அதிகாரி கருத்து!

image

களியக்காவிளை அருகே காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை கிடைத்த வழக்கின் தொடக்க காலத்தில் இருந்தே விசாரணை அதிகாரியாக இருந்த திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி-யாக இருந்த ஷில்பா கூறுகையில், “கிரீஷ்மா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். இது போலீஸ் விசாரணை மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் உள்ளிட்டோரின் வெற்றியாகும். இது டீம் ஒர்க் ஆகும்.”

error: Content is protected !!