Kanyakumari

News August 7, 2025

குமரியில் உழவரைத்தேடி வேளாண்மை முகாம்

image

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டத்தின் படி ஆக.8 அன்று வடக்கு தாமரைகுளம், குலசேகரம் உட்பட 18 கிராமங்களில் முகாம்கள் நடக்கிறது. இம்முகாமில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகளின்வட்டார அலுவலர்கள், உழவர்களை வருவாய் கிராமங்களுக்கே சென்று நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குவார்கள். இம்முகாம்களில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

கள்ளநோட்டுகள் வைத்திருந்த 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்

image

மணலியில் வெனான்சியஸ், சசி, கிளைமண்ட், அமல்ராஜ் ஆகிய 4 பேர் 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் வெனான்சியஸ் இறந்துவிட்டார். சசி தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையில் கிளைமண்ட் மற்றும் அமல்ராஜ் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News August 6, 2025

இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி

image

புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் IOB ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் 30 நாள் இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி ஆக.8 அன்று நாகர்கோவிலில் தொடங்க உள்ளது. இதில் உணவு, சீருடை, பயிற்சி, பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 944844019, 6379596738, 9791894159 என்ற எண்ணை அழைக்கலாம்.

News August 6, 2025

குமரியில் 45 இடங்களில் புள்ளியல் துறை மாதிரி ஆய்வு

image

குமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் தேசிய மாதிரி ஆய்வு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிய நடைபெறுகிறது. குடும்பங்களின் உள்நாட்டு சுற்றுலா செலவு கணக்கெடுப்பு பற்றிய விபரங்கள் குமரியில் பைங்குளம், திற்பரப்பு, கடையால், இடைக்கோடு உள்ளிட்ட 45இ டங்களில் நடைபெற உள்ளது. கணக்கெடுக்க வருபவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

News August 6, 2025

குமரி கூட்டுறவு சங்கத்தில் வேலை

image

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர், எழுத்தாளர் பிரிவில் 50 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ரூ.14000- ரூ.60000 வரை உதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் www.drbkka.in என்ற இணையதளம் மூலம் ஆக.29 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <>இங்கே கிளிக் செய்து <<>>தெரிந்துகொள்ளலாம். SHARE IT

News August 6, 2025

கன்னியாகுமரி: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை..!

image

தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. இங்கு <>CLICK<<>> செய்து விண்ணப்பியுங்க.. குறிப்பு: தேர்வு இல்லாமல் நல்ல சம்பளத்தில் அரசு வேலை… அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

கன்னியாகுமரி பட்டதாரிகளே… உங்களுக்காகவே வங்கி வேலை!

image

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். Share It.

News August 6, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 6) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.30 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.81 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 66 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.76 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 328 கன அடி, பெருஞ்சாணிக்கு 115 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News August 6, 2025

குமரி இளைஞர்கள.. வன்கொடுமை தடுப்புக்குழு பதவி அறிவிப்பு!

image

நாகர்கோவில் R.D.O அளவில் ஆதிதிராவிடர் நலக்குழு, வன்கொடுமை தடுப்புக் குழு, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு குழு உறுப்பினர்களின் பதவிகாலம் முடிந்து விட்டது. இதற்கு புதிய உறுப்பினர்கள் பதவிக்கு நாகர்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தன்னார்வலர்கள், நாகர்கோவில் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் மனுவை அளிக்கலாம் என குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE

News August 6, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 478 மனுக்கள்

image

சுருளகோடு புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 478 மனுக்கள் பல்வேறு துறைகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, வட்டடாட்சியர் சுந்தரவல்லி, முன்னாள் ஊராட்சி தலைவர் விமலாசுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

error: Content is protected !!