India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் 24.01.2025 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்டரங்கம், நாகர்கோவிலில் வைத்து நடைபெற உள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளுடன் அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஆட்சியர் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சுங்கான் கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் குமரி திருவிழா-2025 மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஜன.24 அன்று நடைபெற உள்ளது. சுமார் 50 தொழில் நிறுவனங்கள் மற்றும் 4,500 வேலை வாய்ப்புகளுடன் நடைபெற உள்ள இந்த முகாமிற்கு நேரடியாகவோ, 91766 99228 என்ற எண்ணிலோ kumarifest.org என்ற இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம். SHARE IT.
அகில இந்திய சித்த மருத்துவ கழகம் சார்பில், இம்மாதம் 25ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் மாபெரும் பாரம்பரிய சித்த மருத்துவ விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்கிறார். இதில், சிறந்த சித்த மருத்துவர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விருதுகளும் வழங்கப்படுகிறது.
#இன்று(ஜன.21) காலை 10.30 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம். #அழகிய பாண்டிபுரம், கல்குளம், கருங்கல், திருவட்டார், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலும் மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்.#மாலை 5 மணிக்கு மேல்புறம் சந்திப்பில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.
களியக்காவிளை அருகே காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை கிடைத்த வழக்கின் தொடக்க காலத்தில் இருந்தே விசாரணை அதிகாரியாக இருந்த திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி-யாக இருந்த ஷில்பா கூறுகையில், “கிரீஷ்மா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். இது போலீஸ் விசாரணை மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் உள்ளிட்டோரின் வெற்றியாகும். இது டீம் ஒர்க் ஆகும்.”
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தினமான 26 ஆம் தேதி 95 கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 முதல் 10 வரை அறிவியல் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. நாகர்கோவில் இந்து கல்லூரியில் வைத்து இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமினை கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலத்தண்டாயுதபாணி தொடங்கி வைக்கிறார்.
கேளர மாநிலம் பாறசாலை மூரியங்கரையை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ்(23). குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா(22). ஷாரோன் குமரியில் படித்து வந்தபோது, கிரீஷ்மாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாகியுள்ளது. பின்னர் பெற்றோர் எதிர்க்கவே, காதலனை பிரிய நினைத்த கிரீஷ்மா ஷோரோனை வீட்டிற்கு அழைத்து அவருக்கு தெரியாமல் விஷம் கொடுத்ததில், 11 நாள் சிகிச்சையில் இருந்து அவதிக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் கன்னியாகுமரியில் வசித்து வந்த கிரீஷ்மா என்ற பெண்ணுக்கு(24) தூக்கு தண்டனை விதித்து திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட் இன்று(ஜன.20) அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கிரீஷ்மாவின் மாமன் நிர்மல்குமார் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளா பதிவெண் கொண்ட பொலிரோ கார் ஒன்று, நாகர்கோவில் செல்வதற்காக இன்று(ஜன.20) அதிகாலை வந்து கொண்டிருந்தது. களியங்காடு அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில், ஜோதி நகர் ராஜா தெருவை சேர்ந்த அகில்(24) காரில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.