Kanyakumari

News January 22, 2025

குமரி காவல்துறை சார்பில் ஏலம் அறிவிப்பு

image

குமரி மாவட்ட காவல் துறை தொலைத்தொடர்பு பிரிவில் கழிவு செய்யப்பட்ட 197 மின்கலன்கள் (Batteries) உட்பட 1205 பொருட்கள் பொது ஏலத்தில் 06.02.2025 அன்று விடப்படுகிறது. மத்திய மாநில அரசுகளிடமிருந்து வழங்கப்பட்ட current Air pollution, water pollution certificates மற்றும் உரிமம் பெற்றவர்கள் மட்டும் அசல் உரிமத்தை காண்பித்து மின்கலன்களை ஏலம் எடுப்பதில் பங்கு பெறலாம் என மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது

News January 22, 2025

குமரி மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

குமரி மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு, சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் இம்மாதம் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார். *share it*

News January 22, 2025

கவிமணி மண்டபம் கட்ட திருத்திய மதிப்பீடு தயாரிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் கவிஞர் கவிமணியின் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 92 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் பணிகள் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் இந்த மணிமண்டபம் கட்டுவதற்கு 1,15,00000 ரூபாய் செலவில் திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 22, 2025

உடைந்து விழுந்த கனிமவள லாரியின் பேரிங்

image

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.21) சாலையில் சென்று கொண்டிருந்த கனிமவள லாரியின் பேரிங் பார்ட் உடைந்து விழுந்ததால் லாரி அங்கும் இங்குமாக அலசியது. இதையடுத்து ஓட்டுநர் சாமர்த்தியமாக லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து சாலையில் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

News January 22, 2025

குமரியில் 36,558 பேருக்கு உதவித்தொகை

image

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை 2010ஆம் ஆண்டு முதல் இது வரை மாற்றுத்திறனாளிகள் 2,644 பேரும், 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை பொதுப்பிரிவில் 33,914 பேரும் என 16 ஆண்டுகளில் மொத்தம் 36,558 பேர் உதவித்தொகை பெற்றுள்ளனர். 2025ஆம் ஆண்டுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் 31.3.2025 ஆகும் என அதிகாரிகள் நேற்று கூறினர்.

News January 22, 2025

புத்தளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் போராட்டம் வெற்றி

image

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களின் மாத சம்பளத்தில் கையாடல் நடப்பதாக புத்தளம் பேரூராட்சி பத்தாவது வார்டு பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர் ஜெகநாதன் தலைமையில் நேற்று (ஜன. 21) உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்த பணியை ரத்து செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்

image

அஇஅதிமுக கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் மேல்புறம் ஒன்றியம் பாகோடு,களியக்காவிளை உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த மாற்று கட்சியினர் சுமார் 200 பேர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகி கிளாடிஸ்லில்லி ஏற்பாட்டில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜாண்தங்கம் மற்றும் கழக அமைப்பு செயலாளர்சின்னத்துரை முன்னிலையில் நேற்று(ஜன.21) தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

News January 22, 2025

சைதன்யானந்த ஜி மஹராஜை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர்

image

குமரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி நிர்வாக காரணங்களுக்காக கிழக்கு, மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். இதில் கிழக்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட கோபகுமார் இன்று (ஜன. 21) வெள்ளிமலை ஹிந்துதர்ம வித்தியாபீடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்த ஜி மஹராஜை சந்தித்து ஆசி பெற்றார்.

News January 22, 2025

குமரி: வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலந்தாய்வு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.

News January 21, 2025

குடியரசு தின பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

image

குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நிகழ்ச்சிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. குமரி எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக எஸ்பி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

error: Content is protected !!