India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி, பெருவிளையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய செவிலியர் – 25, மருந்தாளுநர் -1, ஆய்வக நுட்புநர் – 3, பல்நோக்கு பணியாளர் – 3, ஆலோசகர் – 1 உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் <

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம். வெற்றியாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்கு பதிவி செய்ய ஆக.16ம் தேதி வரை கால அவகாசம்.

கன்னியாகுமரி, செண்பகராமன்புதூர் துணைமின் நிலையங்களில் நாளை (ஆக.13) மின் பராமரிப்பு பணி காலை 9 மணி – மாலை 3 மணி வரை நடக்கின்றது. செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், திரவியம் மருத்துவமனை, லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியா Whatsapp குரூப்ல உடனே SHARE பண்ணுங்க…

கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
▶️குளச்சல் – 04651 226303
▶️கன்னியாகுமரி – 04652 270309
▶️கொல்லங்கோடு – 04651 226303
▶️குலசேகரம் – 04651 277699
▶️குழித்துறை – 04651 260200
▶️நாகர்கோவில் – 04652 276331
▶️பத்மநாபபுரம் – 04651 250799
▶️தில்லை நகர் – 04651 223799

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் 15-ம் தேதி நடக்கின்றன. கலெக்டர் அழகு மீனா தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உள்பட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட பெண்களே..! உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு உதவி எண்களை வெளியிட்டுள்ளது. இந்த உதவி எண்களை உங்க மொபைலில் SAVE பண்ணிக்கோங்க. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்…
➟குழந்தைகள் பாதுகாப்பு: 1098
➟பெண்கள் பாதுகாப்பு: 1091/181
➟காவல் ஆம்புலன்ஸ்: 112
➟மூத்த குடிமக்கள் உதவி – 14567
நம்ம கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் எல்லாரும் இந்த நம்பரை SAVE பண்ண SHARE பண்ணுங்க!

குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு – மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க உதவித்தொகை திட்டம் 6 முதல் 9ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நடத்தப்படுகிறது.இதற்கு தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை www.Indiapost.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 29ம் தேதிக்குள் குமரி கோட்ட கண்காணிப்பாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் நாளை மறுநாள் (ஆகஸ்ட்.14) வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் குமரி மாவட்டத்தில் துவங்கி உள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் கட்டணம் வசூலித்தால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் நாகர்கோயில் கோட்டாச்சியர் (04652279833) அல்லது <

குமரி ஆட்சியர் அழகு மீனா உத்தரவின்படி மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை கடைகளில் விற்பனை செய்யப்படுவது & உணவங்களில் விற்கப்படும் உணவின் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற WHATSAPP எண்ணில் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். இந்த தகவலை எல்லோருக்கும் தெரியப்படுத்த SHARE பண்ணுங்க

குமரி மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு – நித்திரவிளை காவல் நிலைய குற்ற வழக்கின் சொத்தான 4850 கிலோ மஞ்சள் இன்று (ஆக.12 ) காலை 11 மணிக்கு ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொது ஏலம் விடப்படுகிறது. பொது இடத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் ஏல முன்தொகை 500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்த நபர்கள் ஏலத் தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து பணமாகச் செலுத்த வேண்டும் .
Sorry, no posts matched your criteria.